இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் கப்பல் ஒன்று மன்னார் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், 2025 பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி இரவு, மன்னாருக்கு தெற்கே இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் பத்து (10) பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, 2025 பெப்ரவரி 02 ஆம் திகதி, வடமத்திய கடற்படை கட்டளை மன்னாருக்கு தெற்கே இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி கப்பல்கள் பலவற்றை அவதானித்ததோடு, அந்த மீன்பிடி கப்பல்களை இலங்கையிலிருந்து அகற்றும் விசேட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அங்கு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீன்பிடி படகொன்று (01) இலங்கை கடற்படையினரால் முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், எல்லை விதிகளை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு (01) இந்திய மீன்பிடிப் படகு மற்றும் பத்து (10) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் இந்திய மீன்பிடி படகு (01) மற்றும் படகில் இருந்த பத்து (10) இந்திய மீனவர்கள் மன்னார் தால்பாடு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.