கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது

இலங்கையை பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் கடும் மழையால் மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதன் படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் ஒருங்கிணைந்து செயற்படும் 07 கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் கம்பஹ, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிவாரணக் குழுக்கள் இன்று (15 அக்டோபர் 2024) வெள்ள நிவாரணப் பணிகளைத் தொடர்கின்றன.

இன்று (2024 அக்டோபர் 15,) காலை நிலவரப்படி, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜாஎல, கட்டுநாயக்க, ஏகல, கடுவெல, நவகமுவ மற்றும் நாத்தண்டிய ஆகிய பிரதேசங்களுக்கு அணுப்பப்பட்ட கடற்படை வெள்ள அனர்த்த நிவாரணக் குழுக்களால் வெள்ளச் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட 1044 பேருக்கு டிங்கிகள் மூலம் பாதுகாப்பான போக்குவரத்தை வழங்குதல், 2827 பேருக்கு சமைத்த மற்றும் உலர் உணவுகளை வழங்குதல் மற்றும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட அனர்த்த நிவாரணப் பணிகள் தொடர்ந்து மெற்கொள்கின்றனர்.