சீரற்ற காலநிலைக்கு மத்தியில் கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன

இலங்கையை பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் கடும் மழையால் மேல் மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதன் படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் (DMC) ஒருங்கிணைந்து செயற்படும் 08 கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் கம்பஹ, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிவாரணக் குழுக்கள் இன்று (14 அக்டோபர் 2024) வெள்ள நிவாரணப் பணிகளைத் தொடர்கின்றன.

கடும் மழை காரணமாக களு கங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓய மற்றும் தெதுரு ஓய ஆகிய பிரதான மற்றும் கிளை ஆறுகள் நிரம்பி வழிவதால், கொழும்பு, கம்பஹ மற்றும் புத்தளம் மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக கடுவெல, மாபிம, நவகமுவ, இஹலகம, ஜா-எல மற்றும் நாத்தண்டிய ஆகிய பகுதிகளுக்கு கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன் கடற்படை நிவாரணக் குழுக்கள் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன் படி, 641 பேருக்கு டிங்கிகள் மூலம் பாதுகாப்பான போக்குவரத்து வழங்குதல், 4876 பேருக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுகளை விநியோகித்தல், நீரில் மூழ்கும் அபாயத்தில் 03 பேரை மீட்டு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவ நிவாரணக் குழுக்கள் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

மேலும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் ஒருங்கிணைத்து மேற்கு கடற்படை கட்டளையில் இருபத்தி இரண்டு (22) கூடுதல் நிவாரணக் குழுக்களும், தெற்கு கடற்படை கட்டளையில் ஒன்பது (09) மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளையில் பதினேழு (17) கூடுதல் நிவாரணக் குழுக்களும் உட்பட மொத்தம் 48 குழுக்கள், தேவைப்படும்போது உடனடியாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளன.