2020 வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய சந்தேக நபர் ஒருவர் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் வைத்து கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று (05 ஒக்டோபர் 2024) புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்ட இரண்டாயிரத்து இருபது (2020) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர்(01) கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கருவலகஸ்வெவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது வவுனியாவிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று சோதனையிடப்பட்டுள்ளது. அங்கு, குறித்த பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்ட இரண்டாயிரத்து இருபது (2020) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபரையும் வெளிநாட்டு சிகரெட்டுகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.