சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 செப்டெம்பர் 28 ஆம் திகதி திருகோணமலை கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருபத்தைந்து (25) நபர்களுடன் ஐந்து (05) டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, 2024 செப்டம்பர் 28 ஆம் திகதி, கிழக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தின் கடற்படையினர் திருகோணமலை சல்லி சாம்பல்தீவு மற்றும் புறா தீவு கடற்பகுதியில், மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 மீனவர்களுடன் 03 படகுகள் கைப்பற்றப்பட்டன.

மேலும், அதே நாளில், திருகோணமலை சேப்பல் முனைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல்துறை மற்றும் இலங்கை கடற்படை கப்பல் மகாவலி நிறுவனங்களின் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட பதின்மூன்று (13) மீனவர்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 முதல் 43 வயதுக்குட்பட்ட கிண்ணியா, எரக்கண்டி மற்றும் தம்பலகமுவ பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதோடு, குறித்த சந்தேகநபர்களுடன் டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் திருகோணமலை கடற்றொழில் பரிசோதகர் மற்றும் கொட்பே கடற்றொழில் பரிசோதகர் ஆகியோரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.