சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 810 கிலோ கிராம் பீடி இலைகள் புத்தளத்தில் கைது

இலங்கை கடற்படையினர் புத்தளம் கலால் திணைக்கள அலுவலகத்துடன் இணைந்து 2024 செப்டெம்பர் 19 ஆம் திகதி புத்தளம் ஆலங்குடா பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எண்ணூற்று பத்து (810) கிலோகிராம் பீடி இலைகளை கைப்பற்றினர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர் புத்தளம் கலால் திணைக்கள அலுவலகத்துடன் இணைந்து 2024 செப்டெம்பர் 19 ஆம் திகதி புத்தளம் ஆலங்குடா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அந்த பகுதியில் ஒரு நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இருபத்தி ஆறு (26) மூட்டைகளில் அடைக்கப்பட்ட எண்ணூற்று பத்து (810) கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டது.

மேலும், கடற்படையினரின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு கடத்தல்காரர்கள் இந்த பீடி இலைகளை மறைத்து வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது, மேலும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.