வர்த்தக வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 08 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் திருகோணமலை ஜின்னபுரம் கடற்பகுதி மற்றும் முல்லைத்தீவு கர்நாடகேணி கடற்பகுதிக்கு அப்பால் கடலில் 2024 செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் வர்த்தக வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு (08) நபர்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்களை கைப்பற்றினர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் மற்றும் சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா மற்றும் ரன்வெலி நிறுவனங்களின் கடற்படையினர் இணைந்து, 2024 செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி திருகோணமலை ஜின்னபுரம் கடற்பகுதி மற்றும் முல்லைத்தீவு கர்நாடகேணி கடற்பகுதிக்கு அப்பால் கடலில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) டிங்கி படகுகள் சோதனையிடப்பட்டது. அங்கு, சட்டவிரோதமான முறையில் வர்த்தக வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு (08) நபர்களுடன் குறித்த இரண்டு (02) டிங்கி படகுகளும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் செந்தூர், மொதொத்துவாரம், மதுரங்குளிய மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 17 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், திருகோணமலை ஜின்னாபுரம் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நால்வர் (04), டிங்கி படகு (01) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி கடற்றொழில் பரிசோதகரிமும் முல்லைத்தீவு கர்நாடகேணி கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நால்வர் (04), டிங்கி (01) மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொக்கிளாய் பொலிஸ் நிலையத்திலும் ஒப்படைக்கப்பட்டன.