சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் 2 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் கல்பிட்டி உச்சமுனை கடற்பகுதிக்கு அப்பால் 2024 செப்டெம்பர் 17 ஆம் திகதி இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்குவதற்காக, கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்குச் செந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினரால் 2024 செப்டெம்பர் 17 ஆம் திகதி கல்பிட்டி உச்சமுனை கடற்பகுதிக்கு அப்பால் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான படகொன்று சோதனை செய்யப்பட்டது. அங்கு, பதினொரு (11) பைகளில் அடைக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துப் பொருட்கள், இரண்டு (02) சந்தேகநபர்கள் மற்றும் டிங்கி படகொன்றையும் (01) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.