சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 பேர் கைது

கிளிநொச்சி, கல்பிட்டி மற்றும் திருகோணமலை கடற்பகுதிகளில் 2024 செப்டெம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினர், இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோத மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பதினெட்டு (18) நபர்களுடன் ஒன்பது (09) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2024 செப்டெம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் வடக்கு கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான வெத்தலக்கேணி கடற்படை நிலையத்தினால் கிளிநொச்சி சாலை பகுதிக்கு அப்பால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு (07) மீனவர்களுடன் ஒன்பது (07) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், 2024 செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி, வடமேற்கு கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நிருவனத்தின் கடற்படையினர் கல்பிட்டி தீவிலுள்ள உச்சமுனை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட நான்கு (04) மீனவர்கள் மற்றும் டிங்கி படகொன்ரும் (01), சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. 2024 செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி, கிழக்கு கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் படகு மூலம் திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத வலைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஏழு (07) மீனவர்களுடன், டிங்கி படகொன்றையும் (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 வயதுக்கும் 61 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், வவுனியா, முல்லைதீவு, யாழ்ப்பாணம், கல்பிட்டி, திருகோணமலை மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த சந்தேகநபர்களுடன் டிங்கிகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், புத்தளம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகங்களிலும், கொட்பே கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திலும் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.