சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 702 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

புத்தளம் தளுவ பகுதியில் 2024 ஜூன் 15 ஆம் திகதி காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 702 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி 2024 ஜூன் 15 ஆம் திகதி காலை வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தின் கடற்படையினர் புத்தளம் தலுவ பகுதியில் தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்டுள்ளனர். அங்கு, பத்தொன்பது (19) பொதிகளாக (ஈரமான எடையில்) மறைத்து வைக்கப்பட்டிருந்த எழுநூற்று இரண்டு கிலோகிராம் (702) பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் (02) கைது செய்யப்பட்டனர். மேலும், சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் மற்றும் மதுரங்குளிய பிரதேசத்தை சேர்ந்த 42 மற்றும் 44 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பீடி இலைகள் மற்றும் முச்சக்கர வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.