வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் கடைக்காடு கடற்பகுதியில் 2024 ஜூன் மாதம் 12 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோத மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பதினாறு (16) நபர்களுடன் எட்டு (08) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும் சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2024 ஜூன் மாதம் 12 ஆம் திகதி, வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலக்கேணி கடற்படை நிலையத்திற்கு உட்பட்ட சுண்டிக்குளம் கடற்படை பிரிவின் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான எட்டு (08) டிங்கி படகுகள் அவதானித்து பரிசோதிக்கப்பட்டன. அங்கு, தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோத மின்சாரத்தைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பதினாறு (16) பேருடன் குறித்த எட்டு (08) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் முள்ளியான் மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் 18 வயது முதல் 53 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் 16 பேரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.