மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கடற்படையின் அனர்த்த நிவாரணக் குழுக்கள்; கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காகவும் அவர்களின் அன்றாட தேவைகளுக்காகவும் படகுகள் மூலம் போக்குவரத்து வசதிகள் மற்றும் அனர்த்த நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

அதன்படி, இன்று (2024 ஜூன் 03,) காலைக்குள், கடற்படையினர் முப்பத்தாறு (36) பேரை மீட்டு, பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் மற்றும் கிட்டத்தட்ட நானூறு பேருக்கு உணவு விநியோகம் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்கினர்.

இதன் படி, கொழும்பு மாவட்டத்தின் கடுவெல, மீதொட்டமுல்ல, சீதாவக்க மற்றும் ஹன்வெல்ல பகுதிகளுக்கு ஆறு (06) நிவாரணக் குழுக்களும், களுத்துறை மாவட்டத்தின் பதுரலிய, புளத்சிங்கள, இங்கிரிய மற்றும் வெலிப்பன்ன பகுதிகளுக்கு எட்டு (08) நிவாரணக் குழுக்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான பகுதிக்கு ஒரு (01) நிவாரணக் குழுவும் காலி மாவட்டத்தில் தவலம, உடுகம, பத்தேகம மற்றும் நாகொட பகுதிகளுக்கு ஆறு (06) நிவாரணக் குழுக்களும், மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை, மாலிம்பட, அக்குரஸ்ஸ, பனாத்துகம மற்றும் கம்புருப்பிட்டிய பிரதேசங்களுக்கு 12 நிவாரணக் குழுக்களும் உட்பட 33 நிவாரணக் குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக வெள்ள அபாயத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான அறுபது (60) கூடுதல் நிவாரண குழுக்களை கடற்படை தயார் நிலையில் வைத்துள்ளது.