மோசமான வானிலையை எதிர்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில்

மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2024 ஜூன் மாதம் 01 ஆம் திகதி, களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கல, புவக்பிட்டிய, பாலிந்தநுவர மற்றும் காலி மாவட்டத்தின் வெலிபன்ன, அக்குரஸ்ஸ மற்றும் பாணடுகம ஆகிய இடங்களுக்கு கடற்படையின் அனர்த்த நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர். தற்போது குறித்த நிவாரணக் குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, களு கங்கை, கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையின் பிரதான ஆறுகள் மற்றும் கிளை நதிகள் அதிக மழை காரணமாக நிரம்பி வழியும் மட்டத்தை எட்டியுள்ளதால், பத்து (10) கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள் புலத்சிங்கள, புவக்பிட்டிய, பாலிந்தனுவர, வெலிபன்ன, தவலம, அக்குரஸ்ஸ மற்றும் பனாதுகம பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், மோசமான வானிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க, உடனடி நடவடிக்கை படகுகள் படை, சிறப்புக் படகுகள் படை மற்றும் மரைன் படைப்பிரிவு உள்ளிட்ட கடற்படையின் நூற்று பதினாறு (116) கூடுதல் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.