மோசமான காலநிலை காரணமாக முந்தலம பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய 03 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து புத்தளம் பெரியகடவலை பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு வெள்ளத்தில் இருந்து மூன்று பேர் கொண்ட குடும்பத்தை காப்பாற்றும் நடவடிக்கையில் இலங்கை கடற்படையினர் இன்று (2024 மே 20) ஈடுபட்டுள்ளனர்.

பெரியகடவலை ஏரியில் இருந்து வெளியேறும் கால்வாயில் நீர்மட்டம் உயர்வதால் புத்தளம் முந்தலம பிரதேசத்தில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வெள்ளத்தில் சிக்கி முந்தலம பகுதியில் உள்ள வீடொன்றில் சிக்கியுள்ள மக்களை மீட்குமாறு வடமேற்கு கடற்படைப் பகுதியின் கட்டளைத் தலைமையகத்திற்கு அறிவிக்கப்பட்டது.