சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 338 கிலோ பீடி இலைகள் வடமேற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினர் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி கல்பிட்டி இப்பண்தீவ் கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற சுமார் முந்நூற்று முப்பத்தெட்டு (338) கிலோகிராம் பீடி இலைகளை (ஈரமான எடையுடன்) கைப்பற்றினர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்திற்கு சொந்தமான உச்சமுனை கடற்படை பிரிவினரால் 2024 மே 15 ஆம் திகதி கல்பிட்டி இப்பண்தீவ் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது , அந்தக் கடற்பகுதியில் (ஈரமான எடை) மிதந்து கொண்டிருந்த பதினொரு (11) பைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் முந்நூற்று முப்பத்தெட்டு (338) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

கடற்படை நடவடிக்கைகளினால் கரைக்கு கொண்டுவர முடியாமல் கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கடற்படையினரின் பொறுப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.