தொடங்கொட மற்றும் அகலிய பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்ற கடற்படையின் உதவி

காலி, பத்தேகம பகுதியில் கிங் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தொடங்கொட மற்றும் அகலிய பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று 2024 மே 3 ஆம் திகதி கடற்படையால் மேற்கொள்ளப்பட்டது.

கனமழை காரணமாக, கிங் ஆற்றின் நீர்மட்டம் உயர்வதால், நீரில் அடித்துச் செல்லப்படும் குப்பைகள், மரக்கட்டைகள், மூங்கில் புதர்கள், தொடங்கொடை, அகலிய பாலங்களில் தேங்கி, தண்ணீர் வெளியேறுவதைத் தடுக்கிறது. இப்பகுதியில் வெள்ள அபாயம் உள்ளதால் கழிவுகளை அகற்றும் பணிகள் கடற்படையினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, 2024 மே 03, ஆம் திகதி தெற்கு கடற்படைக் கட்டளைக்கு இணைக்கப்பட்ட சுழியோடி மற்றும் விரைவு நடவடிக்கை படகுகள் படையணியின் குழுவொன்று மூலம், தொடங்கொட மற்றும் அகலிய பாலங்களில் மேற்கொள்ளப்பட்ட கழிவு அகற்றும் நடவடிக்கையால் குறித்த பகுதிகளில் வெள்ள அபாயத்தைத் தடுத்து ஏற்படக்கூடிய அச்சுறுத்தலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.