சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 13 பேர் மன்னாரில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் இனைந்து 2024 ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மன்னார் வன்காலே மற்றும் பள்ளிமுனை கடற்பகுதிகளில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 13 பேருடன் 777 கடல் அட்டைகள், 05 இழுவை படகுகள் மற்றும் பல சுழியோடி உபகரணங்கள் கைது செய்துள்ளனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, 2024 ஏப்ரல் 29 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் புஸ்ஸதேவ நிருவனத்திற்கு சொந்தமான வன்காலே முகாமின் கடற்படையினர் மன்னாரில் மேற்கொண்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த இருவருடன் நூற்று முப்பத்தைந்து கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி கருவிகள் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிருவனத்தின் கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் 2024 ஏப்ரல் 30 ஆம் திகதி பள்ளிமுனை பகுதியில் மேற்கொண்ட மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 11 பேர் சட்டவிரோதமாக பிடித்த 642 கடல் அட்டைகள் மற்றும் 05 இழுவை படகுகள் கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வன்காலை, இலுப்புக்கவாய் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 19 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார், வன்காலை பகுதியில் கைது செய்யப்பட்ட 02 பேர், கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நானாட்டான் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், மன்னார், பள்ளிமுனை பகுதியில் கடல் அட்டைகள் மற்றும் 05 இழுவை படகுகளுடன் கைது செய்யப்பட்ட 11 நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.