சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 1229 கிலோ கிராம் பீடி இலைகள் கல்பிட்டியில் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படை, இராணுவம் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் இணைந்து 2024 ஏப்ரல் 30 ஆம் திகதி கல்பிட்டி மொஹொத்துவாரம் பகுதியில் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் ஆயிரத்து இருநூற்று இருபத்தி ஒன்பது (1229) கிலோகிராம் பீடி இலைகள் கைது செய்யப்பட்டது.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடல்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனம், இராணுவம் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் ஆகியன இணைந்து 2024 ஏப்ரல் 30 ஆம் திகதி கல்பிட்டி மொஹொத்துவாரம் பகுதியில் மேற்கொண்ட இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது முப்பத்தொன்பது (39) சாக்குகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்து இருநூற்று இருபத்தி ஒன்பது (1229) கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் தொகுதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.