சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பீடி இலைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்றுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

கல்பிட்டி, பத்தலங்குண்டுவவிற்கு முன்னால் உள்ள கடற்பரப்பில் 2024 பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சுமார் ஆயிரத்து நானூற்று எழுபத்தொரு கிலோகிராம் (1471) பீடி இலைகளுடன் (ஈரமான எடையுடன்) டிங்கி படகொன்று மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடல் வழிகளாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில், கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர் 2024 பெப்ரவரி 19 ஆம் திகதி மாலை கல்பிட்டி, பத்தலங்குண்டுவவிற்கு முன்னால் உள்ள கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த டிங்கி படகொன்று சோதனை செய்தனர். அங்கு, சட்டவிரோதமான முறையில் நாற்பத்தி இரண்டு (42) பைகளில் அடைக்கப்பட்ட சுமார் ஆயிரத்து நானூற்று எழுபத்தொரு (1471) கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) சரக்குகளுடன் டிங்கி படகு(01) மற்றும் இரண்டு சந்தேக நபர்கள் (02) கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 32 மற்றும் 37 வயதுடைய கல்பிட்டியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த சந்தேகநபர்கள் (02), பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு (01) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.