கல்பிட்டி மாம்புரி பகுதிக்கு அப்பால் கடல் பகுதியில் வைத்து பல பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் 2024 ஜனவரி 23 ஆம் திகதி கல்பிட்டி மாம்புரி கடற்பகுதியில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, குறித்த கடற்பகுதியில் மிதந்த ஐந்நூற்று இருபது (520) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகளை கைப்பற்றியுள்ளனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2024 ஜனவரி 23, ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடலோர ரோந்துக் கப்பலொன்றில் கடற்படையினர், கல்பிட்டி மாம்புரி கடற்பகுதியில் ரோந்து சென்ற போது, குறித்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பதினாறு (16) மூட்டைகள் மிதப்பதை அவதானித்து ஆய்வு செய்தனர். அங்கு, குறித்த பையில் (ஈரமான எடை) பொதி செய்யப்பட்ட ஐந்நூற்று இருபது (520) கிலோ எழுநூற்று அறுபது (760) கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

மேலும், கடற்படை நடவடிக்கைகளினால் கரைக்கு கொண்டுவர முடியாமல் கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கடற்படையினரின் பொறுப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.