10600 போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இனைந்து 2024 ஜனவரி 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மிஹிந்தலை மற்றும் தலைமன்னார், கட்டுக்காரயன்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளின் போது பத்தாயிரத்து அறுநூறு (10600) போதை மாத்திரைகளுடன் (Pregabalin Capsules), இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் (01) கைது செய்யப்பட்டது.

அதன்படி, 2024 ஜனவரி 12 ஆம் திகதி மிஹிந்தலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிறுவனத்தின் கடற்படையினர் மற்றும் செட்டிகுளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை சோதனையிட்டனர். குறித்த நபரின் வசமிருந்த விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் (01) எடுத்துச் செல்லப்பட்ட நூறு (Pregabalin Capsules) போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் (01) மற்றும் மோட்டார் சைக்கிள் கைது செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2024 ஜனவரி 13 ஆம் திகதி, இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிருவனத்தின் கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வட மாகாண விசேட அதிரடிப் பிரிவினர் இணைந்து தலைமன்னார் கட்டுக்காரயன்குடியிருப்புப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்து அவரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது அப்பகுதியில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பத்தாயிரத்து ஐநூறு (10500) போதைப்பொருள் மாத்திரைகள் (Pregabalin Capsules) கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளின் மூலம், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 மற்றும் 38 வயதுடைய மிஹிந்தலை மற்றும் தலைமன்னார் பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மிஹிந்தலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (01), போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிள் (01) மிஹிந்தலை பொலிஸாரிடமும், தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் (01) மற்றும் போதைப் பொருள்கள் தலைமன்னார் பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.