வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையின் உதவி

இலங்கையை பாதித்துள்ள மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, 2023 டிசம்பர் 12 முதல் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய பலகாவல பகுதிக்கு கடற்படை நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளது. தற்போது அப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை கடற்படை நிவாரண குழுக்களால் வழங்கப்படுகின்றன.

அதன்படி, 2023 டிசம்பர் 12 ஆம் திகதி நில்வலா ஆறு நிரம்பி வழிவதால், மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய பலகாவல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைக் கருத்தில் கொண்டு கடற்படை நிவாரணக் குழுவினர் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டிங்கி படகுகள் மூலம் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்கினர்.

மேலும், தீவை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான கூடுதல் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.