சட்டவிரோதமான முறையில் உலர் கடல் அட்டைகளை ஏற்றிச் சென்ற 04 பேர் மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2023 டிசம்பர் 16 ஆம் திகதி அதிகாலை மன்னார் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது எண்ணூற்று எட்டு (808) கிலோகிராம் உலர் கடல் அட்டைகளுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் நான்கு (04) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி கடற்படை பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

அதன்படி, 2023 டிசம்பர் 16, ஆம் திகதி அதிகாலை வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான கரையோர ரோந்துக் கப்பலொன்று பயன்படுத்தி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) படகுகள் பயணித்ததை அவதானித்து சோதனையிட்டனர். அங்கு 808 கிலோ 150 கிராம் உலர் கடல் அட்டைகளுடன் நால்வர் (04) மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீர்கொழும்பு மற்றும் கல்பிட்டி பகுதியில் வசிக்கும் 18 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, சந்தேகநபர்கள் உலர் கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.