2020 நவம்பர் 05 ஆம் திகதி வெத்தலகேணி கடல் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக நாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.63 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 213 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

">

ரூ.63 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

2020 நவம்பர் 05 ஆம் திகதி வெத்தலகேணி கடல் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக நாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.63 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 213 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் வெத்தலகேணி கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்கிருந்து 08 பாலிதீன் சாக்குகளில் நிரப்பப்பட்ட 98 தொகுப்புகளில் உள்ள 213 கிலொ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாரு கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் வீதி மதிப்பு சுமார் ரூ. 63,900,000.00 (63.9 மில்லியன்) என்று நம்பப்படுகிறது.

மேலும், கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள், வெத்தலகேணி, உடுத்துரை மற்றும் அலியாவலை பகுதியில் வசிக்கும் 36 மற்றும் 41 வயதுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பளை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டனர்.