சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட 818 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் தொகையுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் இன்று (2020 செப்டம்பர் 16) கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

">

சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட சுமார் 818 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட 818 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் தொகையுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் இன்று (2020 செப்டம்பர் 16) கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார் வடக்கு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கொண்டு வர முட்பட்ட 12 சாக்குகளில் அடைத்து வைக்கப்பட்ட 510 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர், அங்கு சந்தேக நபர்களுடன் ஒரு டிங்கி படகும் கடற்படை கைப்பற்றியது. மேலும் மன்னார் வன்காலே பகுதியில் நடத்திய ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, கடற்கரையில் கைவிடப்பட்ட 5 சாக்குகளில் 308 கிலோகிராம் மஞ்சளை கடற்படை பறிமுதல் செய்தது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் 26 முதல் 37 வயதுக்குட்பட்ட மன்னார் பல்லெமுனை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பின்னர், அவர்கள் தனிமைப்படுத்தும் பணிக்காக தலைமன்னார் பொது சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தற்போதைய COVID-19 தொற்று சூழ்நிலையில் சுகாதாரத் துறை வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் உலர்ந்த மஞ்சள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.