நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 643 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2025 ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களில் தலைமன்னார், கல்பிட்டி மற்றும் நீர்க்கொழும்பு ஆகிய கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட அறுநூற்று நாற்பத்து மூன்று (643) கிலோ முந்நூற்று எண்பது (380) கிராம் பீடி இலைகளுடன் (01) டிங்கி படகினை கடற்படையினர் கைது செய்தனர்.

28 Apr 2025

நுவரொலியவில் உள்ள க்ரகரி நீர்த்தேக்கத்தில் (Jet Ski) படகொன்று கவிழ்ந்து நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த 2 பேரை கடற்படை மீட்டது

நுவரெலியாவின் க்ரகரி நீர்த்தேக்கத்தில் விளையாடி கொண்டிருந்த இரண்டு பேர், (Jet Ski) படகு கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கியுள்ளதுடன், கடற்படையின் விரைவான மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவு (4RU) மீட்புப் பணியை மேற்கொண்டது.

26 Apr 2025

கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கைது

இலங்கை கடற்படையினர், 2025 ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கல்பிட்டி பகுதி மற்றும் அம்பாறை காவல்துறையினருடன் இணைந்து பதியதலாவ பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 751 கிராம் கேரள கஞ்சா மற்றும் 01 கிலோ 95 கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி (01) கைது செய்யதனர்.

26 Apr 2025

600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் திருகோணமலையில் கைது

இலங்கை கடற்படையினர், திருகோணமலை துறைமுக காவல்துறையுடன் இணைந்து 2025 ஏப்ரல் 22 ஆம் திகதி திருகோணமலை அனுராதபுரம் சந்திப் பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட சுமார் அறுநூறு (600) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் (01) இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

25 Apr 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பொருட்கள் மற்றும் செல்லப்பிராணிகளுடன் 04 சந்தேக நபர்கள் கல்பிட்டி மற்றும் புத்தளம் பகுதிகளில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2025 ஏப்ரல் 23) அதிகாலை கல்பிட்டி, ஆலன்குடா கடல் பகுதியிலும் புத்தளம் தொடுவாவ பகுதியிலும் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரவும், கொண்டு செல்லவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு; ஏலக்காய் மற்றும் ஏலக்காய் விதைகள், ஸ்மார்ட் மொபைல் போன்கள், பெண்களுக்கான ஆயத்த ஆடைகள், ஒரு தொலைக்காட்சி, இரசாயன போத்தல்கள், குளிர்பான போத்தல்கள் மற்றும் எண்பது (80) புறாக்கள், ஒரு டிங்கி படகு, ஒரு வாடகை வண்டி மற்றும் நான்கு (04) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

23 Apr 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வேளாண் இரசாயனங்கள், பீடி இலைகள் மற்றும் மசாலாப் பொருட்களை ஏற்றிச் சென்ற டிங்கி படகொன்று நீர்கொழும்பு பகுதியில் கடற்படையினரால் கைது

2025 ஏப்ரல் 22 ஆம் திகதி நீர்கொழும்புக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் பகுதியில் கைவிடப்பட்ட ஒரு டிங்கி படகிலிருந்து ஆயிரத்து நூற்று ஐம்பத்தாறு (1156) போத்தல்கள் வேளாண் இரசாயனங்கள், நான்காயிரத்து இருநூற்று இருபத்து நான்கு (4224) பக்கெட்டுகள் வேளாண் இரசாயனங்கள், அறுபத்தேழு (67) கிலோகிராம் எண்ணூறு (800) கிராம் பீடி இலைகள் மற்றும் எழுபத்தைந்து (75) கிலோகிராம் முன்னூறு (300) கிராம் ஏலக்காய் ஆகியவற்றை கடற்படையினர் கைது செய்தனர்.

23 Apr 2025

லுணுகம்வெஹெரவில் உள்ளூர் கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் கைது

இலங்கை கடற்படையினர், காவல்துறையினருடன் இணைந்து 2025 ஏப்ரல் 20 ஆம் திகதி இரவு திஸ்ஸமஹாராம கிரிந்த பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த சுமார் 01 கிலோ 800 கிராம் உள்ளூர் கஞ்சாவுடன், 02 சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் (01) கைது செய்யதனர்.

23 Apr 2025

திருகோணமலையில் 565 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

இலங்கை கடற்படை, திருகோணமலை துறைமுக காவல்துறை மற்றும் சர்தாபுர சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி திருகோணமலை நகரம் மற்றும் கோட்பே மீன்வளத் துறைமுக வளாகத்தில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட சுமார் ஐநூற்று அறுபத்தைந்து (565) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

23 Apr 2025

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு செல்ல தயாராக இருந்த 8 கிலோ 960 கிராம் தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் தலைமன்னாரில் கைது

இலங்கை கடற்படையினர் தலைமன்னாரின், ஊருமலை கடலோரப் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக செல்ல கொண்டு தயார் நிலையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் எட்டு (08) கிலோ தொள்ளாயிரத்து அறுபது (960) கிராம் தங்கத்துடன் தலைமன்னார் ஊருமலை பகுதியில் 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி இரண்டு (02) சந்தேக நபர்களும் ஒரு (01) தெப்பம் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

22 Apr 2025

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட அழகுசாதனப் பொருட்களை மன்னாருக்கு வடக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 ஏப்ரல் 16 ஆம் திகதி வடக்கு, மன்னாரின் கிராஞ்சி கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த அழகுசாதனப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

17 Apr 2025