நடவடிக்கை செய்தி
காலி மீன்பிடி துறைமுக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ கடற்படையின் உதவியுடன் வெற்றிகரமாக அணைக்கப்பட்டது

காலி மீன்பிடி துறைமுக வளாகத்தில் பயன்படுத்தப்படாத மீன்பிடி கப்பல்கள் வைக்கப்பட்டுள்ள முற்றத்தில் இருந்த (01) மீன்பிடிக் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீயை அணைக்கவும், தீ பரவாமல் தடுக்கவும் இன்று (2025 ஆகஸ்ட் 10) தெற்கு கடற்படைக் கட்டளையைச் சேர்ந்த கடற்படை தீயணைப்புக் குழுவினரால் உதவிகள் வழங்கப்பட்டன.
10 Aug 2025
உள்நாட்டு நீர்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் 09 பிற்பகல் மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்நாட்டு நீர்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
10 Aug 2025
அனுராதபுரத்தில் 6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து அனுராதபுரம் சல்காடு மைதானத்திற்கு அருகில் 2025 ஆகஸ்ட் 04 ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, இருபத்தி ஒன்பது (29) கிலோகிராம் மற்றும் தொள்ளாயிரத்து ஒரு (901) கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற (01) மோட்டார் வாகனத்துடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
07 Aug 2025
கற்பிட்டி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், கற்பிட்டி, பத்தலங்குண்டுவ தீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் 2025 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இரவு மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய மீன்பிடி படகு (01) மற்றும் பத்து (10) இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.
06 Aug 2025
யாழ்ப்பாணம் கடைக்காடு பகுதியில் ரூ.23 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம், கடைக்காடு, அலியாவேலி கழப்பு அருகே இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நூற்று இரண்டு (102) கிலோகிராம் மற்றும் முந்நூற்று ஐம்பது (350) கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா, இருபத்தி மூன்று (23) மில்லியன் ரூபாயை விட அதிகமான தெரு மதிப்புள்ள ஒரு தொகையை கடற்படையனர் 2025 ஆகஸ்ட் 04 அன்று கைப்பற்றினர்.
05 Aug 2025
உள்நாட்டு நீர்பரப்பில் அத்துமீறிய இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் நெடுந் தீவிற்கு அன்மித்த உள்நாட்டு நீர்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த சந்தேகத்திற்கிடமான (01) இந்திய மீன்பிடிக் படகுடன் நான்கு (04) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
04 Aug 2025
சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுப்பதற்கான கடற்படையினரின் நடவடிக்கைகளில் 23 நபர்களுடன் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை, மீன்பிடி மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து கடந்த இரண்டு வாரங்களில் (2025 ஜூலை 23 முதல் ஜூலை 31 வரை) உள்ளூர் கடற்பரப்பை உள்ளடக்கி மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட இருபத்தி இரண்டு (22) நபர்களையும், பொலிஸாருடன் இணைந்து விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட இருநூற்று பத்து (210) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஐந்து (05) டிங்கிகள் மற்றும் ஒரு (01) சந்தேக நபரையும் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
01 Aug 2025
கடற்படையினரால் மேற்கொண்ட நடவடிக்கையினால் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 29 ஆம் திகதி நீர்க்கொழும்பு மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஐநூற்று எண்பத்து மூன்று (583) கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
01 Aug 2025
சிலாவத்துறை அரிப்பு பகுதியில் ரூ.20 மில்லியனுக்கும் அதிகமான தெரு மதிப்புள்ள கஞ்சா தொகையானது கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 29 ஆம் திகதி அதிகாலை சிலாவத்துறை அரிப்பு பகுதியில், நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் ரூ. 20 மில்லியனுக்கும் அதிகமான தெரு மதிப்புள்ள நூற்று ஒரு (101) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கேரள கஞ்சாவானது பறிமுதல் செய்யப்பட்டது.
31 Jul 2025
நீர்கொழும்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வர முட்பட்ட 1285 கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் 604 கிலோகிராம் உலர்ந்த இஞ்சியை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், நீர்கொழும்பு, குட்டிதூவ மற்றும் குடாபாடுவ கடற்கரைப் பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற ஆயிரத்து இருநூற்று எண்பத்தைந்து (1285) கிலோகிராம் பீடி இலைகள், அறுநூற்று நான்கு (604) கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய ஒரு கொள்கலன் (01) ஆகியவற்றை கடற்படையினரால் 2025 ஜூலை 29 ஆம் திகதி அன்று கைப்பற்றப்பட்டன.
30 Jul 2025