நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 26 பேர் கைது

2025 பெப்ரவரி 28ஆம் திகதி முதல் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி வரை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது முல்லைத்தீவு நந்திக்கடல் கலப்பு, திருகோணமலை பின்குடா, மண்முனை, ஏறக்கண்டி, வெத்தலகேணி, மட்டக்களப்பு கலப்பு, யாழ்பாணம் குதிரை முனை, கிண்ணியா கரையோர மற்றும் கடல் பிரதேசங்களில் சட்டவிரோத நிலப்பகுதிகளில் இருபத்தி ஆறு (26) பேர் இரவில் சுழியோடி மீன்பிடித்தல், சட்டவிரோத கடலட்டைகளை பிடித்தல் மற்றும் வெடிமருந்து பயன்படுத்தி மீன்பிடித்த இருபத்தாறு (26) நபர்கள், இருநூற்று முப்பத்து மூன்று (233) சட்டவிரோத பொறி வலைகள், பன்னிரண்டு (12) சட்டவிரோத டிராமல் வலைகள், பதினொரு (11) மோனோபிலமென்ட் வலைகள், 2130 கடலட்டைகள், இரண்டு (02) கெப் வண்டிகள் மற்றும் நான்கு (04) டிங்கி படகுகள் கைது செய்யப்பட்டன.

12 Mar 2025

சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்பரப்பிற்குல் இந்திய மீன்பிடிக் படகொன்று மன்னார் தெற்கு கடல் பிரதேசத்தில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 மார்ச் 06ஆம் திகதி அன்று இரவு மன்னார் தெற்கு கடலில் மேற்கொண்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்பரப்பிற்குல் இந்திய மீன்பிடிக் படகொன்றுடன் (01) இந்திய மீன்வர்கள் பதினான்கு (14) பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

07 Mar 2025

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சுமார் 160000 வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மாத்திரைகள் கல்பிட்டியவில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 மார்ச் 06ஆம் திகதி மாலை கல்பிடிய இப்பனதீவு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், குறித்த கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த டிங்கி படகொன்றில் இருந்த சட்டவிரோதமான முறையில் இந்நாட்டிற்கு கொண்டு வர முற்பட்ட சுமார் ஒரு இலட்சத்தி அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இருபத்தி இரண்டாயிரத்தி நூறு (22,100) மாத்திரைகளுடன் குறித்த டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

06 Mar 2025

பாணம பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு கடற்படையினர் தொடர்ந்தும் பங்களிக்கின்றனர்

கனமழை காரணமாக பாணம பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை 2025 மார்ச் 03 அன்று, ஆரம்பிக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், இராணுவம் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட தரப்பினரின் பங்களிப்புடன் நடவடிக்கைகள் நடைப்பெறுகின்றன.

06 Mar 2025

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் லாஹுகல நீலகிரி ரஜமஹா விகாரையில் சர்வக்ஞ தாதுக்களை ஸ்தாபிக்கும் நிகழ்வில் பங்குபற்றும் பக்தர்களுக்கு கடற்படையினர் நிவாரணம் வழங்கினர்

சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை ஹெடஓயா பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் காரணமாக லாஹுகல நீலகிரி ரஜமஹா விகாரையில் சர்வக்ஞ தாதுக்களை ஸ்தாபிக்கும் புனித மகோற்சவத்திற்காக வருகைத்தரும் பத்தர்களின் பாதுகாப்பிற்காக கடற்படை 2025 மார்ச் 04 ஆம் திகதி, அனர்த்த முகாமைத்துவ நிலையம், இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரின் பங்களிப்புடன் தேவையான நிவாரணங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

05 Mar 2025

சுமார் 69 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கையிருப்புடன் யாழ்ப்பாண வத்திராயன் கடற்கரையில் கைது

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் கிளிநொச்சி வத்திராயன் கடற்கரைப் பகுதியில் 2025 மார்ச் மாதம் 04 ஆம் திகதி காலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரைப் பகுதியில் இருந்த நூற்று எழுபத்து நான்கு (174) கிலோ நூற்று இருபத்தி ஆறு (126) கிராம் கேரளா கஞ்சா தொகையானது கைப்பற்றப்பட்டது.

04 Mar 2025

கொழும்பில் 3000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது

இலங்கை கடற்படையினர், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து 2025 மார்ச் மாதம் 03 ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை அன்மித்த பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கைனை போது, மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் (01) கைது செய்யப்பட்டார்.

04 Mar 2025

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயன்ற 426 கிலோ பீடி இலைகளுடன் 03 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 மார்ச் மாதம் 03 ஆம் திகதி இரவு கல்பிட்டி கருவலக்குடா மற்றும் சின்னஅரிச்சாய் கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற நானூற்று இருபத்தி ஆறு (426) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் மூன்று (03) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

04 Mar 2025

சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4255 கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் வடக்கு கடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், கல்முனை முனை மற்றும் வினயாசோதி கடற்பகுதியில் 2025 மார்ச் 01 ஆம் திகதி இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கையின் மூலம் பிடித்த பதினேழு பேர் (17) நபர்களுடன் சுமார் நாலாயிரத்து இருநூற்று ஐம்பத்தைந்து (4255) கடலட்டைகள் மற்றும் நான்கு (04) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

03 Mar 2025

சுமார் 78 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் வடகடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், இன்று (2025 மார்ச் 03) யாழ்ப்பாணம் அனலைத்தீவின் வடக்கு கடலில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், நூற்று தொண்ணூற்றி ஏழு (197) கிலோகிராம்களுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.

03 Mar 2025