நடவடிக்கை செய்தி

அறுகம்பே பீனட் பார்ம் கடற்கரையில் விபத்திற்குள்ளான வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக கடற்படையினது உதவி

2025 மே 15 அன்று, பனாம அறுகம்பே பீனட் பார்ம் கடற்கரையில் சர்பிங் செய்யும் போது காயமடைந்த ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணுக்கு கடற்படை அடிப்படை முதலுதவி அளித்து, மேலதிக சிகிச்சைக்காக பானம அரசு மருத்துவமனைக்கு உட்படுத்துவதற்காக கடற்படையினர் உதவினர்.

19 May 2025

கற்பிட்டி கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டு வரப்பட்ட உலர்ந்த இஞ்சி மற்றும் ஏலக்காய் தொகையினை கடற்படை கைப்பற்றியது

இலங்கை கடற்படை, 2025 மே 17 ஆம் திகதி கற்பிட்டி ரோதாபாடு களப்பு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் சுமார் 320 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் சுமார் 150 கிலோகிராம் ஏலக்காய் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகைக் கைப்பற்றியது.

19 May 2025

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன

இலங்கை கடற்படையினர், 2025 மே மாதம் 02 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரையில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கைகயின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 310 கிலோகிராம் 44 கிராம் பீடி இலைகள் மற்றும் சுமார் 12,200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களை கைப்பற்றினர்.

15 May 2025

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 பேர் கைது

இலங்கை கடற்படையினர் கடற்றொழில் பரிசோதகர்களுடன் இணைந்து கந்தக்காடு ,பதுமாதலன் , திருக்கோணமலை,கொகிலாய் ,செபல் தீவு, மற்றும் பெக் பே ஆகிய கடற்பரப்பை அன்மித்த கடற்பரப்பில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 28 வரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம், இரவு நேரங்களில் மின்சார விளக்குகள் மற்றும் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்த 38 நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

14 May 2025

87 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான 218 கிலோவை விட அதிகமான கேரளா கஞ்சா பேசாலை பிரதேசத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இருநூற்று பதினெட்டு (218) கிலோகிராம், எண்ணூறு (800) கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு (01) டிங்கி 2025 மே 11 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

12 May 2025

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 497 கிலோ பீடி இலைகளுடன் 04 சந்தேகநபர்கள் புத்தளத்தில் வைத்து கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர் 2025 மே 10 ஆம் திகதி புத்தளம் முகத்துவாரம் கடற்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட நானூற்று தொண்ணூற்று ஏழு (497) கிலோகிராம் பீடி இலைகளுடன் (02) டிங்கிகள் மற்றும் நான்கு (04) சந்தேக நபர்களை கைப்பற்றினர்.

11 May 2025

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 325 கிலோகிராம் பீடி இலைகளை நீர்கொழும்பு பகுதியில் கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படை, நீர்கொழும்பு கடல் பகுதியில் 2025 மே 07 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட முந்நூற்று இருபத்தைந்து (325) கிலோகிராம் மற்றும் நான்கு (04) கிராம் (ஈரமான எடையுடன்) பீடி இலைகளை கைப்பற்றியது.

09 May 2025

120 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான 301 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

யாழ்ப்பாணம், எழுவைதீவிற்கு அப்பால் வடக்கு கடலில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மூன்று (03) சந்தேக நபர்களும், சுமார் முன்னூற்று ஒரு (301) கிலோகிராம் நூற்று ஐம்பது (150) கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி (01) படகும் 2025 மே 07 கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

08 May 2025

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளுடன் கல்பிட்டியவில் 3 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

கல்பிட்டி ஆனவாசலை களப்பு பகுதியில் 2025 மே 02 அன்று இலங்கை கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு கொண்டு செல்ல தயாராக இருந்த பூச்சிக்கொல்லிகளுடன் மூன்று (03) சந்தேக நபர்களையும் ஒரு லாரியையும் (01) கடற்படையினர் கைப்பற்றினர்.

06 May 2025

129 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் வடக்கு கடல் பகுதியில் கைது

இலங்கை கடற்படையினர், வடக்கு கடல் பகுதியில் 2025 ஏப்ரல் 29 ஆம் திகதி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் முந்நூற்று இருபத்தி இரண்டு (322) கிலோ எண்ணூற்று அறுபது (860) கிராம் (ஈரமான எடையுடன்) கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு (02) டிங்கி படகுகளுடன் நான்கு (04) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

30 Apr 2025