Search & Rescue-ta

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவிசாவளை பிரதேச மக்களுக்கு மனிதாபிமான நிவாரணங்களை வழங்க கடற்படை உதவியது

சீரற்ற காலநிலை நிலவியதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவிசாவளை பிரதேச மக்களுக்காக, அமிதிரிகலை சுகாதார மருத்துவ அலுவலகம் மூலம் ஒரு மருத்துவ சிகிச்சையானது, அவிசாவளை குருகல்ல கனிஷ்ட வித்தியாலயத்தில் 2025 நவம்பர் 30 ஆம் திகதி நடைபெற்றதுடன், இந்த மருத்துவ சிகிச்சைக்காகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்களுக்கு மனிதாபிமான நிவாரணம் வழங்குவதற்காகவும் கடற்படை உதவி வழங்கியது

01 Dec 2025

மன்னார் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 157 பேரை கடற்படையினர் மீட்டனர்

மன்னாரின் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நூற்று ஐம்பத்தேழு (157) பேரை கடற்படை அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம் மீட்ட பின்னர், அவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்க கடற்படையால் 2025 நவம்பர் 30 அன்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

01 Dec 2025

யாழ்ப்பாணம், அனலத்தீவிலிருந்து நோய்வாய்ப்பட்ட குழந்தையை அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட மருத்துவமனைக்கு அனுமதிப்பதற்கு கடற்படையினர் உதவினர்

யாழ்ப்பாணம் அனலத்தீவு தீவில் இருந்து நோய்வாய்ப்பட்ட குழந்தையை அவசர சிகிச்சைக்காக கடற்படையின் படகின் மூலம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை தீவில் உள்ள கரம்பன் இறங்குத்துறைக்கு கொண்டு வர கடற்படையினர் நேற்று இரவு (2025 நவம்பர் 30) நடவடிக்கை எடுத்தனர்.

01 Dec 2025

வவுனியா செட்டிகுளத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த காரை மீட்க கடற்படையின் உதவி

கனமழை காரணமாக வவுனியாவின் செட்டிகுளம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து, கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள் நேற்று (2025 நவம்பர் 30,) மதவாச்சி-மன்னார் சாலையில் உள்ள செட்டிகுளம் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய காரையும் அதில் இருந்தவர்களையும் கடற்படையினர் மீட்டனர்.

01 Dec 2025

திருகோணமலையில் மாவில் ஆறு குளக்கரை இடிந்து விழுந்ததில் சிக்கித் தவித்த 309 பேரை கடற்படை மீட்டது

திருகோணமலையில் உள்ள மாவில் ஆறு குளத்தின் ஒரு பகுதி நேற்று (2025 நவம்பர் 30,) பெய்த கனமழை காரணமாக நிரம்பி வழியும் நிலையை எட்டியதால் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கடற்படை நவம்பர் 30 ஆம் திகதி முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து வருகின்றது.

01 Dec 2025