Search & Rescue-ta

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு

சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் மருத்துவ சேவைகள், உலர் உணவு, குடிநீர் வழங்குதல் மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த நீர் விநியோக சேவைகளை மீட்டெடுப்பது உள்ளிட்ட மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படை நேற்று (2025 டிசம்பர் 01,) உதவி வழங்கியது.

02 Dec 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவிசாவளை பிரதேச மக்களுக்கு மனிதாபிமான நிவாரணங்களை வழங்க கடற்படை உதவியது

சீரற்ற காலநிலை நிலவியதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவிசாவளை பிரதேச மக்களுக்காக, அமிதிரிகலை சுகாதார மருத்துவ அலுவலகம் மூலம் ஒரு மருத்துவ சிகிச்சையானது, அவிசாவளை குருகல்ல கனிஷ்ட வித்தியாலயத்தில் 2025 நவம்பர் 30 ஆம் திகதி நடைபெற்றதுடன், இந்த மருத்துவ சிகிச்சைக்காகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்களுக்கு மனிதாபிமான நிவாரணம் வழங்குவதற்காகவும் கடற்படை உதவி வழங்கியது

01 Dec 2025

மன்னார் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 157 பேரை கடற்படையினர் மீட்டனர்

மன்னாரின் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நூற்று ஐம்பத்தேழு (157) பேரை கடற்படை அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம் மீட்ட பின்னர், அவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்க கடற்படையால் 2025 நவம்பர் 30 அன்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

01 Dec 2025

யாழ்ப்பாணம், அனலத்தீவிலிருந்து நோய்வாய்ப்பட்ட குழந்தையை அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட மருத்துவமனைக்கு அனுமதிப்பதற்கு கடற்படையினர் உதவினர்

யாழ்ப்பாணம் அனலத்தீவு தீவில் இருந்து நோய்வாய்ப்பட்ட குழந்தையை அவசர சிகிச்சைக்காக கடற்படையின் படகின் மூலம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை தீவில் உள்ள கரம்பன் இறங்குத்துறைக்கு கொண்டு வர கடற்படையினர் நேற்று இரவு (2025 நவம்பர் 30) நடவடிக்கை எடுத்தனர்.

01 Dec 2025

வவுனியா செட்டிகுளத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த காரை மீட்க கடற்படையின் உதவி

கனமழை காரணமாக வவுனியாவின் செட்டிகுளம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து, கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள் நேற்று (2025 நவம்பர் 30,) மதவாச்சி-மன்னார் சாலையில் உள்ள செட்டிகுளம் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய காரையும் அதில் இருந்தவர்களையும் கடற்படையினர் மீட்டனர்.

01 Dec 2025

திருகோணமலையில் மாவில் ஆறு குளக்கரை இடிந்து விழுந்ததில் சிக்கித் தவித்த 309 பேரை கடற்படை மீட்டது

திருகோணமலையில் உள்ள மாவில் ஆறு குளத்தின் ஒரு பகுதி நேற்று (2025 நவம்பர் 30,) பெய்த கனமழை காரணமாக நிரம்பி வழியும் நிலையை எட்டியதால் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கடற்படை நவம்பர் 30 ஆம் திகதி முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து வருகின்றது.

01 Dec 2025

தேசிய அனர்த்த சூழ்நிலைக்கு ஏற்ப கடற்படை மேற்கொண்ட அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் 10,099 பேருக்கு நிவாரணம் வழங்கினர்

தீவில் ஏற்பட்ட சீரற்ற வானிலையின் காரணமாக, ஏற்பட்ட தேசிய அனர்த்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், கடற்படை 2025 நவம்பர் 22 முதல் முழு தீவையும் உள்ளடக்கிய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்றுவரை (2025 நவம்பர் 30,) தீவின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம் 10,099 பேருக்கு அனர்த்த நிவாரணம் வழங்கியுள்ளதுடன் இதைத் தொடர்ந்து மேலும் நடவடிக்கைகள் தொடர்ந்துக் கொண்டு வருகின்றன.

30 Nov 2025

மத்திய, மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் தொடர்ச்சியான அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம் 882 பேருக்கு கடற்படை நிவாரணம் வழங்கியது

மத்திய, மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் ஏற்பட்ட மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை இன்று (2025 நவம்பர் 29,) தனது நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன்படி, மேற்கு கடற்படை கட்டளையானது கண்டி, கன்னோருவ, கம்பளை, கட்டுகஸ்தோட்டை, சிலாபம், இரத்தினபுரி, கொலன்னாவ, மீகொட, அவிசாவளை, தல்துவ, வெலிவிட்ட, திவுலப்பிட்டிய, படல்லகம, மஹவெவ, கிரிவுல்ல, கேகாலை, ருவன்வெல்ல, அயகம, கலவானை, மாரபன மற்றும் மீரிகம ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 882 மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியுள்ளது.

29 Nov 2025

அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் தொடர்ச்சியான பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் மூலம் கடற்படை 380 பேருக்கு நிவாரணம் வழங்கியுள்ளது

அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஏற்பட்ட மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை இன்று (2025 நவம்பர் 29,) தனது நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையினால்: அனுராதபுர இபலோகம, பதவி பராக்கிரமபுர, சேனபுர, மதவாச்சிய, செட்டிகுளம், கல்னேவ, தபுத்தேகம மற்றும் ஓமந்தை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த 380 பேருக்கு நிவாரணம் வழங்கியது.

29 Nov 2025

திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 1310 பேருக்கு கடற்படை நிவாரணம் வழங்கியது

இலங்கை கடற்படையினர், தீவு முழுவதையும் உள்ளடக்கிய அதிக ஆபத்துள்ள அனர்த்த பகுதிகளுக்கு அனர்த்த நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளது. இன்று (2025 நவம்பர் 29,) கிழக்கு கடற்படை கட்டளையினால், திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களினுல்; கிண்ணியா மல்லபச்சேனை, கந்தளை, மூதூர் சாபி நகர், கலாஓயா, கோமரங்கடவல, ரால் பாலம், கல்லெல்ல மற்றும் அளுத்கம போகமுவ ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளின் போது, வெள்ளம் காரணமாக ஆபத்தில் இருந்த 69 பேர் மீட்கப்பட்டு 1241 பேர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

29 Nov 2025