Other Contraband-ta

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற பீடி இலைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டார்

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2025 செப்டம்பர் 24 ஆம் திகதி நீர்கொழும்பு மொரவல கடற்கரையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எண்ணூற்று முப்பத்தைந்து (835) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் அறுநூற்று முப்பத்தைந்து (635) கிலோகிராம் பூச்சிக்கொல்லிகளை ஏற்றிச் சென்ற மூன்று (03) டிங்கிகளுடன் சந்தேக நபரொருவர் (01) கைது செய்யப்பட்டனர்.

26 Sep 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1197 கிலோகிராம் பீடி இலைகள் உள்ளிட்ட பொருட்களுடன் சிலாவத்துறையில் ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்

இலங்கை கடற்படை, 2025 செப்டம்பர் 18, அன்று சிலாவத்துறை, பண்டரவேலி கடற்கரைப் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஆயிரத்து நூற்று தொண்ணூற்று ஏழு (1197) கிலோகிராம் பீடி இலைகள், ஆயிரத்து எழுநூற்று அறுபத்தைந்து (1765) சவர்க்கார கட்டிகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகு ஆகியவற்றுடன் ஒரு (01) சந்தேக நபரும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்.

21 Sep 2025

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1680 கிலோ பீடி இலைகளுடன் 02 சந்தேக நபர்களை நீர்க்கொழும்பு கடல் பகுதியில் கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், 2025 செப்டம்பர் 12 ஆம் திகதி நீர்க்கொழும்பு கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து அறுநூற்று எண்பது (1680) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி (01) படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

16 Sep 2025

முகத்துவாரத்தில் 180 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் சிக்கினார்

இலங்கை கடற்படை, ஸ்ரீ ஜெயவர்தனபுர பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 13 ஆம் திகதி முகத்துவாரம் பகுதியில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, சட்டவிரோத விற்பனைக்காக தயார்நிலையில் இருந்த நூற்று எண்பது (180) வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒரு (01) சந்தேக நபரைக் கைது செய்தனர்.

14 Sep 2025

மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற 91 பறவைகளுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

மன்னார் பேசாலை சிரிதோப்பு கடற்கரைப் பகுதியில் 2025 செப்டம்பர் 10 ஆம் தேதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தொண்ணூற்றொன்று (91) பறவைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும் ஒரு (01) டிங்கி படகுடன் கைப்பற்றினர்.

11 Sep 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 833 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் 08 மற்றும் 15 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு களப்பு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட எண்ணூற்று முப்பத்து மூன்று (833) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகளையும் கைப்பற்றினர்.

21 Aug 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் 1180 கிலோகிராம் மற்றும் 20,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கற்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் 12 ஆம் திகதி இரவு கற்பிட்டியின் சேரக்குளிய களப்பு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து நூற்று எண்பது (1180) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் இருபதாயிரம் (20,000) வெளிநாட்டு சிகரெட்டுகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்களையும், இரண்டு (02)

13 Aug 2025

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1590 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

நீர்கொழும்பு, புத்தளம் மற்றும் முகத்துவாரம் களப்பு மற்றும் கடல் பகுதிகளில் 2025 ஆகஸ்ட் 01 முதல் 10 வரை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட (1590) ஆயிரத்து ஐநூற்று தொண்ணூறு கிலோகிராமை விட அதிகமாக பீடி இலைகளுடன் ஒரு (01) சந்தேக நபர் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.

12 Aug 2025

நீர்கொழும்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வர முட்பட்ட 1285 கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் 604 கிலோகிராம் உலர்ந்த இஞ்சியை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், நீர்கொழும்பு, குட்டிதூவ மற்றும் குடாபாடுவ கடற்கரைப் பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற ஆயிரத்து இருநூற்று எண்பத்தைந்து (1285) கிலோகிராம் பீடி இலைகள், அறுநூற்று நான்கு (604) கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய ஒரு கொள்கலன் (01) ஆகியவற்றை கடற்படையினரால் 2025 ஜூலை 29 ஆம் திகதி அன்று கைப்பற்றப்பட்டன.

30 Jul 2025

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பீடி இலைகள், விவசாய இரசாயனங்கள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் எட்டு சந்தேக நபர்களை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 20 முதல் 22 வரை கற்பிட்டி வெல்லமுண்டலம், இப்பந்தீவு கடல் பகுதி, சிலாவத்துறை சவரிபுரம் அரிப்பு மேற்கு கடற்கரை பகுதி மற்றும் உச்சிமுனை வெல்ல தீவு ஆகிய இடங்களில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் இரண்டாயிரத்து முந்நூற்று தொண்ணூற்றொன்பது (2399) கிலோகிராம் பீடி இலைகள், முப்பத்தைந்து (35) கிலோகிராம் ஏலக்காய் மற்றும் ஒரு தொகை விவசாய இரசாயனங்களை ஏற்றிச் சென்ற நான்கு (04) டிங்கி படகுகளையும், எட்டு (08) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

24 Jul 2025