Drug Bust News-ta

கல்பிட்டி களப்பில் ரூ.8 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கல்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் இலங்கை கடற்படை 2025 நவம்பர் 04 அன்று நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் முப்பத்தெட்டு (38) கிலோகிராம் கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு (02) டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன.

05 Nov 2025

பருத்தித்துறையில் 23 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் 2025 நவம்பர் 01 அன்று நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நான்கு சந்தேக நபர்களான (03) ஆண்கள், (01) பெண் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகளுடன் சுமார் நூற்று ஐந்து (105) கிலோகிராம் கஞ்சாவானது கைப்பற்றப்பட்டது.

03 Nov 2025

மேற்கு கடற்கரையின் ஆழ்கடலில் 6 சந்தேக நபர்களையும், 335 கிலோகிராமை விட அதிகமான ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையால், இலங்கையின் மேற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படகுடன் ஆறு (06) சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்டனர். போதைப்பொருட்கலை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் படகும் சந்தேக நபர்களும் இன்று (2025 நவம்பர் 02) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அதைத் தொடர்ந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய சிறப்பு பரிசோதனையின் போது, கடற்படையால் கைப்பற்றப்பட்ட பதினாறு (16) பொதிகளில் ஐஸ் போதைப்பொருள் சுமார் 250 கிலோகிராமை விட அதிகமான தொகை மற்றும் ஹெராயின் சுமார் 85 கிலோகிராமை விட அதிகமான தொகை இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டதுடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் போதைப்பொருட்களை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.

02 Nov 2025

41 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சாவுடன் வடக்கு கடலில் 02 சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல் பகுதியில் 2025 அக்டோபர் 30 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று எண்பத்தைந்து (185) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கஞ்சாவை ஏற்றிச் சென்ற (01) ஒரு டிங்கியுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி (01) ஆகியன கைப்பற்றப்பட்டன.

31 Oct 2025

53 கிலோகிராம் ஹெராயினைக் கொண்டு சென்ற பல நாள் மீன்பிடி படகுடன் தெற்கு கடலில் ஐந்து சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படைக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், தெற்கு கடலில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் ஐந்து (05) சந்தேக நபர்களுடன் உள்ளூர் பல நாள் மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டது. பல நாள் மீன்பிடி படகு இன்று (2025 அக்டோபர் 17) காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மேலும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் நிபுணர்களின் உதவியுடன் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், படகில் இரண்டு உறைகளில் பொதிசெய்யப்பட்ட சுமார் 53 கிலோ 134 கிராம் ஹெராயின் இருப்பது தெரியவந்தது. இவ் போதைப்பொருள் தொகை, சந்தேக நபர்கள் மற்றும் பல நாள் மீன்பிடி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

17 Oct 2025

தெற்கு கடலில் ஹெரோயின், ஐஸ் மற்றும் ஹஷிஷ் சுமார் 839 கிலோகிராம் அடங்கிய பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படை பாதுகாப்பான நாட்டை உறுதிபடுத்துவதற்காக போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் போது கிடைத்த நம்பகமான தகவலின்படி 2025 அக்டோபர் 14 ஆம் திகதி காலை, தெற்கு கடலில் கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த ஹெரோயின், ஐஸ் மற்றும் ஹாஷிஷ் போதைப்பொருட்கள் அடங்கிய சுமார் 839 கிலோகிராம் அடங்கிய ஐம்பத்தொரு (51) பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் கையிருப்பை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.

15 Oct 2025

மன்னார், நருவிலிக்குளம் பகுதியில் ரூ.203 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், காவல்துறையினருடன் இணைந்து, மன்னாரின் நருவிலிக்குளம் கடலோரப் பகுதியில் மன்னார் சிறப்பு காவல் பிரிவுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 02, அன்றும் இன்றும் (2025 செப்டம்பர் 03,) நடத்திய சிறப்புத் தேடுதல் போது, ரூ. 203 மில்லியனுக்கும் அதிகமான மொத்த தெரு மதிப்புள்ள தொள்ளாயிரத்து ஆறு (906) கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

03 Sep 2025

யாழ்ப்பாணத்தின் சம்பிலித்துறை கடற்கரைப் பகுதியில் ரூ.21 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம் மாதகல், சம்பிலித்துறை கடலோரப் பகுதியில் 2025 ஆகஸ்ட் 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் தொண்ணூற்று ஆறு (96) கிலோகிராம் மற்றும் ஐநூறு (500) கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த தெரு மதிப்பு இருபத்தொரு (21) மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும்.

02 Sep 2025

27மில்லியன் ரூபாவை விட பெறுமதியான 121 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஐந்து (05) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் மன்னார், வான்கலை பகுதி மற்றும் யாழ்ப்பாணம்,நெடுந்தீவுக்கு அருகிலுள்ள உள்ளூர் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, இரண்டு (02) டிங்கி படகுகள், ஐந்து (05) சந்தேக நபர்கள் மற்றும் நூற்று இருபத்தொரு (121) கிலோகிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

30 Aug 2025

பேசாலையில் ரூ.24 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

தலைமன்னார், குடியிருப்பு மற்றும் பேசாலைக்கு இடைப்பட்ட கரையோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 2025 ஆகஸ்ட் 12 ஆம் திகதி கடற்படையினரால் நூற்றுப் பத்து (110) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த தெரு மதிப்பு இருபத்தி நான்கு (24) மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும்.

13 Aug 2025