12வது பாதுகாப்பு சேவைகள் கெரம் போட்டியில் கடற்படை ஆண்கள் கெரம் அணி இரண்டாம் இடத்தை வென்றது

2023 ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படை கப்பல் கெமுணு நிருவனத்தில் நடைபெற்ற 12வது பாதுகாப்பு சேவைகள் கெரம் போட்டியில் ஆண்கள் பிரிவின் இரண்டாம் இடத்தை கடற்படை ஆண்கள் கேரம் அணி வென்றது.

இதன்படி, இராணுவ ஆண்கள் கேரம் அணியுடன் இடம்பெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் 3-2 மற்றும் இரட்டையர் ஆட்டத்தில் சமநிலை பெற்று கடற்படை வீரர்கள் 12வது பாதுகாப்பு சேவைகள் கெரம் போட்டியில் இரண்டாம் இடத்தை வென்றனர்.

மேலும், இந் நிகழ்வில் கடற்படை பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியியலாளர் ரியர் அட்மிரல் ஹிரான் பாலசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், கடற்படைப் பணிப்பாளர் விளையாட்டுப் கொமடோர் ரொஷான் அத்துகோரல, கடற்படை கெரம் அணியின் தலைவர் கப்டன் விராஜ் தங்கம்பல உட்பட முப்படைகளின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் ஏனைய அணிகளின் வீரர்கள் கலந்துகொண்டனர்.