நிகழ்வு-செய்தி
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த கடற்படைக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளது

2020 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த கடற்படை வீரர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று (2022 ஏப்ரல் 06) கடற்படைத் தலைமையகத்திலுள்ள அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க கேட்போர் கூடத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இடம்பெற்றது.
06 Apr 2022
2021 கடற்படை பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படை ஆய்வுப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படை பேச்சுப் போட்டித்தொடரின் - 2021 (Public Speaking Competition - 2021) இறுதிப் போட்டியில் சிறந்து விளங்கிய கடற்படை வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு கடற்படைத் துனை தளபதி ரியர் அட்மிரல் வை என் ஜயரத்ன தலைமையில் இன்று (2022 ஏப்ரல் 05) கடற்படைத் தலைமையகத்தில் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
05 Apr 2022
பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் ‘PROTTASHA’ திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது

பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான ‘Corvette’ வகையின் போர் கப்பலான ‘BNS PROTTASHA’ இன்று (2022 ஏப்ரல் 2) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க வருகை தந்த கப்பலை வரவேற்றனர்.
02 Apr 2022
‘சயுருசர’ வின் 44 வது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது

கடற்படை ஊடகப் பிரிவினால் வெளியிடப்படுகின்ற சயுருசர சஞ்சிகையின் 44வது பதிப்பு அதன் பிரதம ஆசிரியர் லெப்டினன்ட் கமாண்டர் (தன்னார்வ) எஸ்.ஆர்.சுதுசிங்கவினால் இன்று (2022 மார்ச் 31) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் வழங்கப்பட்டது.
31 Mar 2022
தேசிய விவசாய வீட்டுத்தோட்ட மேம்பாட்டுத் திட்டமான ‘ஹரித தெயக்’ - 2022 கடற்படையில் செயல்படுத்தப்பட்டது

தேசிய விவசாய வீட்டுத்தோட்ட அபிவிருத்தித் திட்டமான ‘ஹரித தெயக்’ – 2022 உடன் இணைந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2022 மார்ச் 29) கடற்படைத் தலைமையகத்தில் மரக்கன்றுகளை நட்டு இலங்கை கடற்படையில் தேசிய விவசாய வீட்டுத்தோட்ட அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
29 Mar 2022
பானம அரசு தமிழ் பாடசாலைக்கு கடற்படையினரால் கணினியொன்று வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பானம அரசு தமிழ் பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டிற்காக கணினி ஒன்று அன்பளிப்பு தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மகிந்த மஹவத்தவின் தலைமையில் 2022 மார்ச் 24 ஆம் திகதி நடைபெற்றது.
28 Mar 2022
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான இருதரப்பு கடற்படை பயிற்சி மேற்கு கடலில் நடைபெறவுள்ளது

இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு கடற்படை பயிற்சி 2022 மார்ச் 26 ஆம் திகதி கொழும்பு கடற்பரப்பில் தொடங்கி 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
27 Mar 2022
கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள கடல்சார் தகவல் இணைவு மையத்தின் வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன

கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள கடல்சார் தகவல் இணைவு மையத்திற்கு (Information Fusion Centre - Colombo) கடல்சார் தகவல் சேகரிப்பு மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் (MDA Equipment) உத்தியோகபூர்வமாக கையளிப்பு இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki அவர்களின் தலைமையில் இன்று (2022 மார்ச் 25) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.
25 Mar 2022
அமெரிக்க கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான பணியாளர் கலந்துரையாடல் மற்றும் கூட்டு கடல்சார் கலந்துரையாடலின் மூன்றாவது தொகுதி நிறைவடைந்தது.

அமெரிக்க கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையில் கடற்படை தலைமையகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற கலந்துரையாடலின் மூன்றாவது தொகுதி (03rd Navy to Navy Staff Talks SLN – USN) 2022 மார்ச் 23, அன்று வெற்றிகரமாக முடிவடைந்தது.
24 Mar 2022
அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல்கள் குழுவின் துணைத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல்கள் குழுவின் துணைத் தளபதி ரியர் அட்மிரல் ராபர்ட் டி. கிளார்க் (Reserve Deputy Commander, Seventh Fleet Rear Admiral Robert T. Clark) தலைமையிலான அமெரிக்கக் கடற்படைக் குழு இன்று (2022 மார்ச் 21) கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தனர்.
21 Mar 2022