நிகழ்வு-செய்தி
நைஜீரிய தேசிய பாதுகாப்பு கல்லுரியின் அதிகாரிகள் கடற்படை தலைமையகத்திற்கு வருகை
இலங்கையில் ஆய்வு சுற்றுப்பயணமொன்று மேற்கொண்டுள்ள நைஜீரிய தேசிய பாதுகாப்பு கல்லுரியின் மாணவ அதிகாரிகள் மற்றும் இயக்குநர்கள் தூதுக்குழு இன்று (2023 ஏப்ரல் 24) கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர்.
25 Apr 2023
கடற்படையினர் சியத தொலைக்காட்சியுடன் இணைந்து சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களை திருகோணமலை கடற்படை முகாமில் வெகு சிறப்பாக கொண்டாடினர்.
சியத தொலைக்காட்சியுடன் இணைந்து இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு விழா - 2023' கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமாரவின் தலைமையில் 2023 ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி திருகோணமலை கடற்படை தளத்தில் நடைபெற்றது.
23 Apr 2023
காலி உரையாடல் 2023 அதிகாரப்பூர்வ வலைத்தளம் வெளியிடப்பட்டது
2023 காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்று (2023 ஏப்ரல் 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் வெளியிடப்பட்டது.
21 Apr 2023
பதவி விலகும் இந்தியாவில் உள்ள நமீபிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்
பதவி விலகும் இந்தியாவில் உள்ள நமீபிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் Titus Simon (Brig. Gen Titus Simon) இன்று (ஏப்ரல் 20, 2023) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
21 Apr 2023
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு கோபால் பக்லே ஆகியோருக்கு இடையில் இன்று (2023 ஏப்ரல் 20) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.
21 Apr 2023
இந்தோனேசிய கடற்படைக் கப்பல் 'KRI Bima Suci' நட்புரீதியான விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான 'KRI Bima Suci' என்ற பயிற்சிக் கப்பல் இன்று (2023 ஏப்ரல் 20) நட்புரீதியான விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
21 Apr 2023
கடற்படை தலைமையகத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான 'நெகதட பெலயக்' மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
2023 ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக, விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'நெகதட பெலயக் - தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டத்துடன்' இணைந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இன்று (2023 ஏப்ரல் 20) காலை 06.38 மணியளவில் கடற்படைத் தலைமையக வளாகத்தில் மா மரக்கன்று ஒன்றை நட்டார்.
20 Apr 2023
இலங்கை கடற்படையின் கடல் ஆமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 97 கடல் ஆமை குஞ்சுகளை கடலுக்கு விடப்பட்டது
இலங்கை கடற்படையின் கடல் ஆமைப் பாதுகாப்புத் திட்டத்தினால் பாதுகாக்கப்பட்ட தொண்ணூற்றேழு (97) கடல் ஆமைக் குஞ்சுகள் 2023 ஏப்ரல் 11 ஆம் திகதி பானம கடற்கரையில் தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் ருவன் ரூபசேனவின் பங்கேற்புடன் கடலில் விடப்பட்டன.
12 Apr 2023
கடல்சார் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் பல உபகரணங்கள் அமெரிக்காவிடமிருந்து இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் இன்று (2023 மார்ச் 27) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட கடல்சார் நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்களை பெற்றுக்கொண்டனர். அமெரிக்காவை பிரதிபலித்த கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அந்தோனி சி நெல்சன் அவர்களால் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவிடம் இந்த உபகரணங்களை அடையாளமாக கையளிக்கப்பட்டது.
28 Mar 2023
திருகோணமலை பகுதியில் சமூக கண் சிகிச்சை மற்றும் சுகாதார திட்டமொன்று கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது
திருகோணமலை மற்றும் ஹந்தல சிங்கம் கழகங்கள் இணைந்து 2023 மார்ச் 26 ஆம் திகதி திருகோணமலை நகர மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூக கண் சிகிச்சை மற்றும் தொற்றாத நோய் தடுப்பு திட்டத்துற்கு ஆதரவளிக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
27 Mar 2023