நிகழ்வு-செய்தி

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க பதவியேற்பு

ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக இன்று (2023 செப்டம்பர் 01) குறித்த கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

01 Sep 2023

இந்திய கடற்படையின் ‘INS Delhi’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Delhi’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு இன்று (2023 செப்டம்பர் 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படையின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

01 Sep 2023

ரியர் அட்மிரல் சேனரூப ஜயவர்தன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

38 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் சேனரூப ஜயவர்தன தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2023 செப்டம்பர் 01) ஓய்வு பெற்றார்.

01 Sep 2023

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்ற எசல மஹா பெரஹெரவின் நீர் வெட்டு விழாவிற்கு கடற்படையின் பங்களிப்பு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் நாங்கு பிரதான தேவாலயங்களில் எசல மகா பெரஹராவின் முடிவைக் குறிக்கும் வகையில், இன்று (2023 ஆகஸ்ட் 31) பேராதனை, கட்டம்பே பகுதியில் நடைபெற்ற நீர் வெட்டு விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு இலங்கை கடற்படை பங்களித்தது.

31 Aug 2023

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு கொழும்பு ரோயல் கல்லூரியினால் பாராட்டு

கொழும்பு றோயல் கல்லூரியின் சிறந்த பழைய மாணவரான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இலங்கை கடற்படையின் 25வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் நிகழ்வொன்று இன்று (2023 ஆகஸ்ட் 31) கொழும்பு ரோயல் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

31 Aug 2023

ஐக்கிய அமெரிக்கா செனட் உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலன் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா செனட் உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலன் (Chrish Van Hollen) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (2023 ஆகஸ்ட் 30) இலங்கை கடற்படைக் கப்பல் கஜபாஹுவில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்ததுடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சுங் (Juli Chung ) அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

30 Aug 2023

இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பணியாளர் பாடநெறியை பயிலும் மாணவர் அதிகாரிகள் மற்றும் கல்விப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் இன்று (2023 ஆகஸ்ட் 28) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தனர்.

28 Aug 2023

அடிப்படை பாராசூட் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கடற்படை வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு

அம்பாறை விமானப்படை பாராசூட் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற 53 வது அடிப்படை பாராசூட் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த இலங்கை கடற்படையின் ஒரு அதிகாரி (01) மற்றும் ஐந்து மாலுமிகள் (05) 2023 ஆகஸ்ட் 24 ஆம் திகதி நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

25 Aug 2023

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாகப் பொறுப்பேற்ற எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில (ஓய்வு) இன்று (2023 ஆகஸ்ட் 23) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

23 Aug 2023

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள கேர்ணல் முஹம்மட் பாரூக் (Colonel Muhammad Farooq) அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று (2023 ஆகஸ்ட் 22) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

22 Aug 2023