நிகழ்வு-செய்தி

நச்சு மருந்துகள் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையை தடுக்கும் செயலணி மற்றும் ஊடக நிறுவனங்கள் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது

இலங்கையில் நச்சு மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் நச்சு மருந்துகள் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையை தடுக்கும் செயலணியின் தளபதி மற்றும் கடற்படையின் தளபதியான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் 2023 நவம்பர் 29 ஆம் திகதி ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

01 Dec 2023

இலங்கை கடற்படை சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் - 2023 பிரமாண்டமான முறையில் நடைபெற்றது

2023 டிசம்பர் 8 ஆம் திகதி ஈடுபடுகின்ற இலங்கை கடற்படை சங்கத்தின் 44 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வருடாந்த ஒன்றுகூடல் கடற்படை சங்கத்தின் கௌரவத் தலைவரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) தலைமையில் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்களின் பங்கேற்புடன் 2023 நவம்பர் 25 அன்று வெலிசரவில் (Wave n’ Lake Navy Hall) பிரமாண்டமாக நடைபெற்றது.

01 Dec 2023

‘சயுருசர’ வின் 47 வது பதிப்பு வெளியிடப்பட்டது

கடற்படை ஊடகப் பிரிவினால் வெளியிடப்படுகின்ற சயுருசர சஞ்சிகையின் 47வது பதிப்பு அதன் பிரதம ஆசிரியர் கமாண்டர் (தன்னார்வ) எஸ்.ஆர்.சுதுசிங்கவினால் இன்று (2023 நவம்பர் 27) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் வழங்கப்பட்டது.

27 Nov 2023

கடற்படை மரியாதைக்கு மத்தியில் ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலாக தனது சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ரியர் அட்மிரல் ஜலாஜ் பொன்னம்பெரும தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2023 நவம்பர் 23) ஓய்வு பெற்றார்.

23 Nov 2023

இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் கூட்டு கிறிஸ்தவ நினைவேந்தல் மற்றும் நன்றி செலுத்தும் சேவை நடத்தப்பட்டது

2023 டிசம்பர் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படையை ஆசீர்வதிக்கும் தொடர் மத நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ நினைவேந்தல் மற்றும் நன்றி செலுத்தும் சேவை கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் முன்முயற்சியின் கீழ், 2023 நவம்பர் 21 ஆம் திகதி கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில், கடற்படை சேவா வனிதா பிரிவின் கெளரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவா அவர்களின் பங்களிப்புடன், பொரளை அனைத்து புனிதர்களின் பேராலயத்தில் நடைபெற்றது.

22 Nov 2023

தனமல்வில கித்துல்கொடே ரதன சதஹம் தியான நிலையத்தில் வருடாந்த கடின பிங்கம வைபவம் கடற்படையினரின் பங்களிப்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது

தனமல்வில கித்துல்கொடே ரதன சதஹம் தியான நிலையத்தின் வருடாந்த கடின புண்ணிய மஹோத்ஸவை இலங்கை கடற்படையினரின் தாராள பங்களிப்போடு 2023 நவம்பர் மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

20 Nov 2023

33வது இளநிலை கடற்படை பணியாளர்கள் பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் விழா திருகோணமலையில் இடம்பெற்றது

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்ற 33வது இளநிலை கடற்படை பணியாளர்கள் பாடநெறி வெற்றிகரமாக நிறைவு பெற்றதுடன், அதன் சான்றிதழ் வழங்கும் விழா 2023 நவம்பர் 18 ஆம் திகதி கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி கேட்போர் கூடத்தில் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளை அதிகாரி கொமடோர் புத்திக லியனகமகேவின் அழைப்பின் பேரில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஸ் டி சில்வாவின் தலைமையில் நடைபெற்றது.

19 Nov 2023

தேசிய பாதுகாப்புப் பயிற்சிப் பிரிவு அதிகாரிகளுக்கு கடற்படைத் தளபதியினால் இரவு விருந்து வழங்கப்பட்டது

இலங்கை தேசிய பாதுகாப்பு அகாடமியின் தேசிய பாதுகாப்பு கற்கை நெறியை பயிலும் உத்தியோகத்தர்களுக்கு கடற்படைத் தளபதியினால் பாரம்பரியமாக வழங்கப்படும் இரவு விருந்து குறித்த அகாடமியின் பாடநெறி இலக்கம் இரண்டை (02) சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு 2023 நவம்பர் 17 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் மேற்கு கடற்படை கட்டளை அதிகாரிகளின் இல்லத்தில் வழங்கப்பட்டது.

18 Nov 2023

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரம் புனித பூமியில் கஞ்சுக பூஜை மற்றும் கொடி ஆசீர்வாத நிகழ்வுகள் நடைபெற்றது

2023 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கஞ்சுக பூஜை மற்றும் கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை இம்முறையும் கடற்படை பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்வு 2023 நவம்பர் 16 ஆம் திகதி மற்றும் இன்று (2023 நவம்பர் 17) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் ருவன்வேலி மஹா சேய மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி மாலா லமாஹேவாவும் கலந்து கொண்டார்.

17 Nov 2023

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS KORA’ என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 நவம்பர் 16 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Kora’ கப்பல் வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, இன்று (2023 நவம்பர் 17) இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

17 Nov 2023