நிகழ்வு-செய்தி
கடற்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினரின் ஒன்றுகூடல் வெகு விமரிசையாக நடைபெற்றது

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சமய மற்றும் கடற்படை மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து கடற்படையினர் பரந்த அளவிலான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, கடற்படையினரின் ஒன்றுகூடல் இன்று (20 டிசம்பர் 2023) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் Wave ‘N’ Lake கடற்படை மண்டபத்தில் வண்ணமயமான முறையில் இடம்பெற்றது.
21 Dec 2023
பிரதம உயர் சிறு அலுவலர் டபிள்யூ.எம்.ஜி.ஏ.குமார கடற்படை பிரதம உயர் சிறு அலுவலர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்

இலங்கை கடற்படையின் சிரேஷ்ட மாலுமிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், அறிமுகப்படுத்தப்பட்ட கடற்படை பிரதம உயர் சிறு அலுவலர் (MASTER CHIEF PETTY OFFICER OF NAVY - MCPON) பதவிக்காக பிரதம உயர் சிறு அலுவலர் டபிள்யூ.எம்.ஜி.ஏ.குமார என்ற சிரேஷ்ட மாலுமி இன்று (2023 டிசம்பர் 19) நியமிக்கப்பட்டார். குறித்த பதவியின் அடையாளமான ஆர்ம் பேண்ட் மற்றும் பட்டன் ஆகியவற்றைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களினால் இன்று கடற்படைத் தலைமையகத்தில் அவருக்கு வழங்கப்பட்டது.
20 Dec 2023
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்ற Commodore M Moniruzzaman, அவர்கள் இன்று (19 டிசம்பர் 2023) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.
19 Dec 2023
73 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படைக்கு ஆசீர்வதிக்கும் வகையில் ஸ்ரீ தலதா மாலிகையில் புத்த பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் வகையில் பல சர்வமத நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அந்த சமய நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு கிலன்பச புத்த பூஜை வழங்கும் நிகழ்வு 2023 டிசம்பர் 08 ஆம் திகதியும் அன்னதானம் வழங்கும் சமயச் சடங்குகள் இன்றும் (2023 டிசம்பர் 08) இடம்பெற்றது. குறித்த நிகழ்வுகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவர் திருமதி மாலா லமாஹேவா அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
09 Dec 2023
இலங்கை கடற்படை தனது 73வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது

பெருமைமிக்க வரலாற்றில் மரபுரிமை பெற்ற இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவு விழா இன்று (09 டிசம்பர் 2023) பெருமையுடன் கொண்டாடப்படுவதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் 73வது ஆண்டு நிறைவு விழா கடற்படை மரபுகள் மற்றும் மத நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் நடைபெறுகிறது.
09 Dec 2023
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பதினேழாவது (17) பாடநெறிக்கான விருந்தினர் விரிவுரையை கடற்படைத் தளபதி நடத்தினார்

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகுவின் அழைப்பின் பேரில் கல்லூரியின் பதினேழாவது (17) பாடநெறிக்கான விருந்தினர் விரிவுரையை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் 2023 டிசம்பர் 04 ஆம் திகதி குறித்த கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது.
05 Dec 2023
கடற்படை சொற்பொழிவுப் போட்டியில் மற்றும் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ நினைவுக் கட்டுரைப் போட்டியில் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படை ஆராய்ச்சி பிரிவு மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்ற கடற்படை சொற்பொழிவுப் போட்டி - 2023 (Public Speaking Competition - 2023) மற்றும் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ நினைவுக் கட்டுரைப் போட்டியில் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு 2023 டிசம்பர் 01 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோவின் (மறைந்த) மனைவி திருமதி மோனிகா பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
03 Dec 2023
கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியொன்று திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் இடம்பெற்றது

கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்ச்சியொன்று 2023 டிசம்பர் 01 ஆம் திகதி திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
03 Dec 2023
73 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் இஸ்லாமிய மத நிகழ்ச்சி கொழும்பு செத்தம் வீதி ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது

2023 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் தொடர் சமய நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய சமய நிகழ்ச்சி இன்று (2023 டிசம்பர் 02) கொழும்பு செத்தம் வீதி ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.
02 Dec 2023
73 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் இந்து மத நிகழ்ச்சி கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றது

2023 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் மத நிகழ்ச்சிகளின் இந்து மத நிகழ்ச்சி இன்று (2023 டிசம்பர் 01) கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் இந்து ஆலயத்தில் இடம்பெற்றது.
02 Dec 2023