நிகழ்வு-செய்தி

கடற்படையினரின் பங்களிப்புடன் ஹிக்கடுவை மற்றும் தங்காலை கடற்கரைப் பகுதிகளில் சுத்தப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சுத்தப்படுத்தும் திட்டமொன்று இன்று (2024 ஆகஸ்ட் 17) ஹிக்கடுவ கடற்கரை, தங்காலை துறைமுகம் மற்றும் அதனுடன் இணைந்த கடற்கரையை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

17 Aug 2024

ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

37 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஆகஸ்ட் 16) ஓய்வு பெற்றார்.

16 Aug 2024

இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் கிரிந்த உயர் பயிற்சி நிறுவன வளாகத்தில் நிறுவப்பட்ட Ship-in-a-Box பயிற்சி முன்மாதிரி திறந்து வைக்கப்பட்டது

இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பை விரிவுபடுத்தி, மேற்படி திணைக்களத்தின் கிரிந்த உயர் பயிற்சி நிலைய வளாகத்தில், அமெரிக்காவின் அனுசரணையின் கீழ் நிறுவப்பட்ட படகுகளை அணுகுதல், தேடல் மற்றும் கையகப்படுத்தும் நுட்பங்கள் தொடர்பான பயிற்சி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Ship-in-a-Box பயிற்சி முன்மாதிரியைத் திறந்து வைக்கும் நிகழ்வு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், கௌரவ திருமதி ஜூலி சங் அவர்களின் தலைமையில் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் பூஜித விதானகேவின் பங்களிப்புடன் இன்று (2024 ஆகஸ்ட் 15) கிரிந்த உயர் பயிற்சி நிறுவன வளாகத்தில் இடம்பெற்றது.

15 Aug 2024

அவுஸ்திரேலிய இறையாண்மை எல்லை நடவடிக்கைகளுக்கான கூட்டு பணிப் படையணியின் தளபதி இலங்கை கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்

அரச ஆஸ்திரேலிய கடற்படையின், இறையாண்மை எல்லை நடவடிக்கைகளுக்கான கூட்டு பணிக்குழுவின் தளபதி (Commander Joint Agency Task Force Operation Sovereign Borders) Rear Admiral Brett Sonter RAN மற்றும் அந்தப் படையின் பிரதிநிதிகள் குழு (2024 ஆகஸ்ட் 14) இன்று கடற்படை தலைமையகத்தில், உத்தியோகபூர்வ சந்திப்புக்காக வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தனர்.

14 Aug 2024

கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் தலைமன்னார் துறை அரச தமிழ் கலப்பு பாடசாலையில் சீர்செய்யப்பட்ட மேடை மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது

மன்னார், தலைமன்னார் துறை அரச தமிழ் கலப்புப் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் பாழடைந்த மேடை கடற்படையினரின் தொழிநுட்ப பங்களிப்புடன் சீர்செய்யப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வு இன்று (2024 ஆகஸ்ட் 12,) வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவின் தலைமையில் இடம்பெற்றது.

12 Aug 2024

இலங்கை கடற்படை நாய்கள் காப்பகத்திற்கு இரண்டு பெல்ஜியம் மேலினோயிஸ் நாய்க்குட்டிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது

இலங்கை கடற்படை நாய்கள் காப்பகத்திற்காக (Military Working Dog Unit – MWD) இரண்டு (02) பெல்ஜியம் மேலினோயிஸ் நாய்க்குட்டிகள் மற்றும் உபகரணங்களை 2024 ஆகஸ்ட் 9 ஆம் திகதி கேப்டன் எரல்ட் தர்மரத்ன (Master Mariner) வழங்கியதுடன், கடற்படை காலாட்படையின் பதில் தளபதி கொமடோர் சனத் பிடிகல குறித்த நன்கொடையை பெற்றுக்கொண்டார்.

12 Aug 2024

கொமடோர் சஞ்சீவ பெரேரா கடற்படை ஏவுகணைக் கட்டளை பதில் கொடி அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றார்

கொமடோர் சஞ்சீவ பெரேரா கடற்படை ஏவுகணைக் கட்டளை பதில் கொடி அதிகாரியாக இன்று (2024 08 ஆகஸ்ட்) திருகோணமலை கடற்படை நிலையத்தின் கொடி அதிகாரி கடற்படை ஏவுகணைக் கட்டளை அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

08 Aug 2024

முதலாவது சேவா வனிதா சிங்கர் காட்சியறை வெலிசர கடற்படை வளாகத்தில் திறக்கப்பட்டது

கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்தும் வகையில், முதலாவது சேவா வனிதா சிங்கர் காட்சியறையின் திறப்பு விழா இன்று (2024 ஆகஸ்ட் 07) கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி திருமதி மாலா லமாஹேவாவின் தலைமையில் வெலிசர கடற்படை வளாகத்தில் இடம்பெற்றது.

07 Aug 2024

இந்தியாவின் புது தில்லியில் கொரியா குடியரசு தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இந்தியாவின் புது தில்லியில் உள்ள கொரிய குடியரசு தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகரான Lieutenant Colonel Han Jonghun இன்று (2024 06 ஆகஸ்ட்) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.

06 Aug 2024

இந்திய கடற்படையின் ‘INS Shalki’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் பின் இலங்கையை விட்டு புறப்பட்டுள்ளது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 ஆகஸ்ட் 02 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Shalki’ என்ற நீர்மூழ்கிக் கப்பல், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று (2024 ஆகஸ்ட் 4) இலங்கையை விட்டு வெளியேறியதுடன் இலங்கை கடற்படையினர் குறித்த நீர்மூழ்கி கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தில் வைத்து கடற்படையின் பாரம்பரிய முறைப்படி பிரியாவிடை வழங்கினர்.

04 Aug 2024