நிகழ்வு-செய்தி
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (2025 மார்ச் 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
22 Mar 2025
அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் கட்டளைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் (INDOPACOM) கட்டளைத்தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே.பப்பாரோ உள்ளிட்ட தூதுவர்கள் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இன்று (2025 மார்ச் 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை சந்தித்தனர்.
21 Mar 2025
பாடசாலை வளாகத்தை "மகிழ்ச்சியான பாடசாலையாக" மாற்றுவதற்கு கடற்படையின் குடிமக்களை வலுவூட்டல் மற்றும் சமூக பணி பங்களிப்பு

"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற என்ற கருப்பொருளின் அடிப்படையில் தேசிய விழுமியங்கள் மற்றும் சமூக விழுமியங்களை வளர்க்கும் சூழல் நட்பு கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய திட்டத்தின் கீழ், கடவத்தை பௌத்த ஆரம்பப் பள்ளி, கடவத்தை ஸ்ரீ பிரேமானந்த மகா வித்யாலயம், இம்புல்கொட பரகந்தெனிய மாயாதுன்ன ஆரம்பப் பள்ளி மற்றும் வெலிவேரிய எம்பரலுவ மிஹிது கனிஷ்ட வித்யாலயம் ஆகிய கவர்ச்சிகரமான வளாகங்களுக்கு கடற்படை சமூக பணியின் பங்களிப்பு 2025 மார்ச் 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
21 Mar 2025
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலத்தை "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கு கடற்படையின் குடிமக்களை வலுவூட்டல் மற்றும் சமூக பணி பங்களிப்பு

"மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியால வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
21 Mar 2025
சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 19வது பாடநெறியின் மாணவச் சிப்பாய் அதிகாரிகள் மேற்கு கடற்படை கட்டளைக்கு ஆய்வு விஜயத்தை மேற்கொண்டனர்

சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷாந்த ஹெவகே தலைமையில் 19 ஆவது பணியாளர் பாடநெறியைச் சேர்ந்த 190 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவச் சிப்பாய் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று மேற்கு கடற்படை கட்டளையின் ஆய்வு விஜயத்தில் 2025 மார்ச் 17 அன்று ஈடப்பட்டதுடன், மேலும் இந்த குழுவினரை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு அந்த கட்டளையின் செயல்பாட்டு பணிக்குழுவினரால் வரவேற்கப்பட்டனர்.
21 Mar 2025
பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான 'PROVENCE' என்ற கப்பல் தீவை விட்டு வெளியேறியது

2025 மார்ச் 16 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இலங்கைக்கு வந்த பிரான்சிய கடற்படையின் ‘PROVENCE’ என்ற கப்பல் 2025 மார்ச் 19 ஆம் திகதி இலங்கையை விட்டு வெளியேறியதுடன், இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடற்படை முறைப்படி கொழும்பு துறைமுகதில் கப்பலிற்கு பிரியாவிடை அளித்தனர்.
20 Mar 2025
கல்கமுவ மெதின்னொருவ கனிஷ்ட வித்தியாலயத்தை "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றுவதற்கு கடற்படை சமூக பணியின் பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" என்ற தேசிய திட்டத்திற்கு இணங்க, "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் கல்கமுவ மெதின்னோருவ கனிஷ்ட வித்தியால வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
20 Mar 2025
பிரான்ஸின் இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டுப் படையின் கட்டளைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதியை சந்தித்தார்

பிரான்ஸின் இந்தியப் பெருங்கடல் பிராந்திய கூட்டுப் படையின் கட்டளைத் தளபதி (French Joint Forces Commander in the Indian Ocean) Rear Admiral Hugues LAINE உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக 2025 மார்ச் 19 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை சந்தித்தார்.
20 Mar 2025
கொழும்புக்கு அப்பால் உள்ள கடலில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சுழியோடி பயிற்சி

இலங்கை கடற்படையினர் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை கொழும்பிற்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் மூழ்கியிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கப்பல்களின் எச்சங்களை உள்ளடக்கிய ஒரு ஆய்வு சுழியோடி பயிற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
19 Mar 2025
“க்லீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் நோக்கம் குறித்து கடற்படை வீரர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேளைத்திட்டம்

“அழகான தீவு - புன்னகைக்கும் மக்கள்” என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இலங்கையை சமூக, சூழல் மற்றும் நெறிமுறை ரீதியாக மாற்றியமைக்கும் "க்லீன் ஶ்ரீ லங்கா " தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி செயலணியின் முக்கிய பங்காளியாக இலங்கை கடற்படை செயற்பட்டு வருகின்றடன்துடன்,இது தொடர்பாக கடற்படை வீரர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேளைத்திட்டம் 2025 மார்ச் 17 அன்று வடக்கு கடற்படை கட்டளையில் ஆரம்பிக்கப்பட்டது.
19 Mar 2025