நிகழ்வு-செய்தி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க கடற்படை உதவுகிறது
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் வழங்குவதற்காக முழு தீவையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பு திட்டத்தை கடற்படை செயல்படுத்தியுள்ளது. இதன் கீழ், நீர் வழங்கல் அமைப்புகள், மின்சார அமைப்புகள் மற்றும் பாதைகளை புணரமைத்தல், மருத்துவ சேவைகள், உலர் உணவு மற்றும் குடிநீர் வழங்குதல் ஆகியவற்றில் கடற்படையின் உதவியானது இன்று (2025 டிசம்பர் 02) வழங்கப்பட்டது.
02 Dec 2025
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சமைத்த உணவை வழங்குவதற்காக கடற்படை சிறப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை முழு தீவையும் உள்ளடக்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளதுடன், இதன் கீழ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சமைத்த உணவை வழங்குவதற்காக கடற்படையின் நடமாடும் சமையலறை மற்றும் நடமாடும் மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று (2025 டிசம்பர் 02) கொழும்பு மற்றும் கண்டி பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ளது.
02 Dec 2025
மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படைத் தலைவர், கடற்படை தலைமை அதிகாரியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்
இலங்கையில் உத்தியோகப்பூர்வ சந்திப்பை மேற்கொண்ட மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படைத் தலைவர், Ibrahim Hilmy (Chief of Defence Force of Maldives National Defence Force -MNDF), 2025 டிசம்பர் 01, கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை, உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
02 Dec 2025
ரியர் அட்மிரல் பிரதீப் கருணாதிலக கடற்படை சேவையிலிருந்து கௌரவத்துடன் ஓய்வு பெறுகிறார்
ரியர் அட்மிரல் பிரதீப் கருணாதிலக்க இலங்கை கடற்படையில் 35 வருடங்களுக்கும் மேலான சேவையை முடித்து 2025 நவம்பர் 29 கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
01 Dec 2025
கடற்படைத் தளபதி INS UDAYAGIRI உத்தியோப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
சர்வதேச கடற்படைக் கப்பல் கண்காணிப்பு - 2025 இல் பங்கேற்பதற்காக இன்று (2025 நவம்பர் 27,) தீவுக்கு வந்தடைந்த இந்திய கடற்படையின் INS UDAYAGIRI கப்பலுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட உத்தியோப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
27 Nov 2025
கடற்படைத் தளபதி INS VIKRANT உத்தியோப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இன்று (2025 நவம்பர் 27,) சர்வதேச கடற்படைக் கப்பல் கண்காணிப்பு - 2025 இல் பங்கேற்க தீவுக்கு வந்த இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலான INS VIKRANT க்கு உத்தியோப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
27 Nov 2025
கடற்படைத் தளபதி BNS PROTTOY உத்தியோப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
சர்வதேச போர்க்கப்பல் கண்காணிப்பு - 2025 இல் பங்கேற்பதற்காக இன்று (2025 நவம்பர் 27,) தீவுக்கு வந்தடைந்த இந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலான BNS PROTTOY கப்பலுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட உத்தியோப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
27 Nov 2025
75வது கடற்படை தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் கோவிலில் கடற்படைக்கு ஆசிர்வாதம் வேண்டி இந்து மத நிகழ்ச்சி நடைபெற்றது
2025 டிசம்பர் 9ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கை கடற்படையின் பெருமைமிகு 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வாதம் பெறுவதற்கான தொடர் மத நிகழ்ச்சிகள், 2025 நவம்பர் 23 ஆம் திகதி கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவனேஸ்வரம் இந்து கோவிலில் நடைபெற்றது.
26 Nov 2025
சர்வதேச போர் கப்பல்கள் கண்காணிப்பு 2025 இல் பங்கேற்க வெளிநாட்டு போர்க்கப்பல்கள் தீவுக்கு வருகின்றன
இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிராந்திய மற்றும் உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த ஏழு (07) போர்க்கப்பல்களின் பங்கேற்புடன், 2025 நவம்பர் 30 ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறும் சர்வதேச போர் கப்பல்கள் கண்காணிப்பு - 2025 இல் பங்கேற்க, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று (03) போர்க்கப்பல்கள் 2025 நவம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் தீவை வந்தடைந்தன. கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளின்படி போர்க்கப்பல்களை இலங்கை கடற்படை வரவேற்றது.
26 Nov 2025
கடற்படையால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமானது பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் நுவரகம கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள குடாவெவ புதிய கிராமத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு (01) நிலையமொன்று 2025 நவம்பர் 21 ஆம் திகதி அன்று பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது.
26 Nov 2025


