நிகழ்வு-செய்தி
ஊனமுற்ற போர்வீரர்களின் நலன் குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் கவனம் செலுத்தினார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இன்று (டிசம்பர் 11) அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் அங்கவீனமுற்ற படைவீரர்களின் நலன்புரி மற்றும் சலுகைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு கூட்டம் ஒன்று நடைபெற்றது.
19 Dec 2024
கடற்படையின் பதில் பணிப்பாளர் நாயகமாக கொமடோர் சுஜீவ வீரசூரிய பொறுப்பேற்றுக் கொண்டார்

கடற்படையின் பதில் பணிப்பாளர் நாயகமாக கொமடோர் சுஜீவ வீரசூரிய இன்று (2024 டிசம்பர் 13) கடற்படைத் தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் சேவைகள் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
13 Dec 2024
கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட 1062 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊருமலை கிறிஸ்தவ தேவாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் சமூக நலத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 1062 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் 2024 டிசம்பர் 11 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமாரவின் தலைமையில் தலைமன்னார் ஊருமலை புனித லோரன்ஸ் கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
12 Dec 2024
வடக்கு மாகாண ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களை 2024 டிசம்பர் 07 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
08 Dec 2024
இலங்கை கடற்படையின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு திருகோணமலையில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது

கடற்படையின் பெருமைமிக்க 74 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்ச்சியொன்று 2024 டிசம்பர் 05 ஆம் திகதி திருகோணமலை கடற்படை வைத்தியசாலையில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
06 Dec 2024
கடற்படை சமூக நலத் திட்டத்தின் மூலம் அனுராதபுரம் மாவட்டத்தில் நிருவப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டன

ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு மற்றும் கடற்படை சமூக நலத் திட்டத்தினால் நிர்மானிக்கப்பட்ட 31 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரம் மாவட்டத்தில் 31 இடங்களில் நிறுவும் விசேட திட்டத்தின் கீழ், ஹொரொவ்பதான பிரதேச செயலகப் பிரிவின் கம்மஹெகெவெவ ஸ்ரீ போத்திருக்காராம விஹாரயத்தில் மற்றும் பதவிய அருணகம ஸ்ரீ ஷைலத்தலாராம விஹாரயத்தில் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2024 டிசம்பர் 05 ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.
05 Dec 2024
கடற்படை மூலம் பல் சிகிச்சை முகாமொன்று நடத்தப்பட்டது

இலங்கை கடற்படை பல் மருத்துவ சேவை, கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் Good Neighbours Foundation (Guarantee) Limited நிருவனம் இணைந்து கடற்படை சமூக நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட பல் சிகிச்சை முகாமின் இரண்டாவது கட்டம் மாத்தரை, தலஹிடியாகொட மற்றும் தேவாலேகம பகுதிகளில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மாலா லமாஹேவாவின் தலைமையில் 2024 டிசம்பர் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது.
05 Dec 2024
கடற்படை சமூக நலத் திட்டத்தின் மூலம் அனுராதபுரம் மாவட்டத்தில் நிருவப்பட்ட 04 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டன
ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு மற்றும் கடற்படை சமூக நலத் திட்டத்தினால் நிர்மானிக்கப்பட்ட 31 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அனுராதபுரம் மாவட்டத்தில் 31 இடங்களில் நிறுவும் விசேட திட்டத்தின் கீழ், கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவில் ஜனசிரிகம கிராமம், ஹிகுருவெவகம கிராமம் , 21 கொலனியில் மேற்கு தக்க்ஷிலா கல்லுரி மற்றும் மஹகஸ்வெவ கல்லுரி ஆகியவற்றில் நிறுவப்பட்ட நான்கு (04) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2024 டிசம்பர் 04 ஆம் திகதி பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
04 Dec 2024
கடற்படை மூலம் பல் சிகிச்சை முகாமொன்று நடத்தப்பட்டது

இலங்கை கடற்படை பல் மருத்துவ சேவை, கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் Good Neighbours Foundation (Guarantee) Limited நிருவனம் இணைந்து கடற்படை சமூக நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்படுகின்ற பல் சிகிச்சை முகாமின் முதல் கட்டம் 2024 நவம்பர் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் கருவலகஸ்வெவ மற்றும் ரொட்டவெவ பகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது.
04 Dec 2024
கடற்படை சமூக நலத் திட்டம் மூலம் அனுராதபுரம் மாவட்டத்தில் நிருவப்பட்ட 31 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைக்கும் நிகழ்வு தொடங்கியது

அனுராதபுரம் மாவட்டத்தில் முக்கிய இடங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் மூன்று நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் 2024 டிசம்பர் 03 ஆம் திகதி இலங்கை கடற்படையால் திறந்து வைக்கப்பட்டன. அனுராதபுரம் நாச்சாதூவ முஸ்லிம் மகா வித்தியாலயம், மத்திய நுவர கம்பலாத பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழுகொல்லேவ பாலர் பாடசாலை மற்றும் மஹவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ரந்துவ மீனவர் சங்க மண்டபம் ஆகிய இடங்களில் இந்த புதிய நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டன. இந்த நிகழ்வு அனுராதபுரம் மாவட்டத்தில் 31 இடங்களில் 31 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவுவதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
03 Dec 2024