நிகழ்வு-செய்தி

இலங்கைக்கான துருக்கிக் குடியரசின் தூதுவர் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான துருக்கிக் குடியரசின் தூதுவர் கௌரவ Semih Lütfü Turgut அவர்கள் இன்று (2024 நவம்பர் 07) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

07 Nov 2024

'விருசிசு பிரதீப' புலமைப்பரிசுகள் வழங்கும் நிகழ்வு கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது

தேசிய பாதுகாப்பு நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 'விருசிசு பிரதீப' புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், 'விருசிசு பிரதீப' புலமைப்பரிசில்களை அடையாளமாக வழங்கும் நிகழ்வு கடற்படைத் தலைமையகத்தில் இன்று (2024 நவம்பர் 07) பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரணவின் தலைமையில் இடம்பெற்றது.

07 Nov 2024

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையில் நடைபெற்ற 34 வது சர்வதேச கடல் எல்லை நிர்ணய கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையில் நடைபெற்ற 34 வது சர்வதேச கடல் எல்லை நிர்ணய கூட்டம், 2024 நவம்பர் 06 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பலான விஜயபாகு கப்பலில் காங்கேசன்துறைக்கு வடக்கே இந்திய-இலங்கை கடற்பரப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது.

06 Nov 2024

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கடற்படை தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தா (ஓய்வு) இன்று (2024 நவம்பர் (06) தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். அங்கு, கடற்படை தளபதியை சந்தித்த பின்னர், கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (Maritime Rescue Coordinating Centre, Colombo - MRCC) தகவல் இணைவு மையம் (Information Fusion Centre - IFC) நடவடிக்கைகளை அவதானித்த பாதுகாப்புச் செயலாளர் கடற்படைத் தலைமையகத்தில் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு உரை நிகழ்த்தினார்.

06 Nov 2024

ரியர் அட்மிரல் பிரியால் விதானகே கடற்படை சேவையிலிருந்து கௌரவத்துடன் ஓய்வு பெற்றார்

34 வருட கால சேவையை நிறைவு செய்து ரியர் அட்மிரல் பிரியால் விதானகே இலங்கை கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 நவம்பர் 05) ஓய்வு பெற்றார்.

05 Nov 2024

ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

இலங்கை கடற்படையில் 34 வருட சேவையை நிறைவு செய்து ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் இன்று (2024 நவம்பர் 05,) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

05 Nov 2024

வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் வருண பெர்டினண்ட்ஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

வடமேற்கு கடற்படைக் கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் வருண பெர்டினாண்ட்ஸ் இன்று (2024 நவம்பர் 04) குறித்த கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

04 Nov 2024

தனமல்வில கித்துல்கொடே ரதன சதஹம் தியான நிலையத்தில் வருடாந்த கடின பிங்கம வைபவம் கடற்படையினரின் பங்களிப்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது

தனமல்வில கித்துல்கொடே ரதன சதஹம் தியான நிலையத்தின் வருடாந்த கடின புண்ணிய மஹோத்ஸவை இலங்கை கடற்படையினரின் தாராள பங்களிப்போடு 2024 நவம்பர் மாதம் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

04 Nov 2024

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய கட்டளைத் தளபதியாக ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க பொறுப்பேற்றுக் கொண்டார்

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இன்று (2024 நவம்பர் 03) வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

03 Nov 2024

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரம் புனித பூமியில் கஞ்சுக பூஜை மற்றும் கொடி ஆசீர்வாத நிகழ்வுகள் நடைபெற்றது

2024 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 74 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கஞ்சுக பூஜை மற்றும் கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை இம்முறையும் கடற்படை பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிகழ்வு 2024 நவம்பர் 02 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் ருவன்வேலி மஹா சேய மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி மாலா லமாஹேவாவும் கலந்து கொண்டார்.

03 Nov 2024