நிகழ்வு-செய்தி
பாகிஸ்தான் கடற் கூட்டமைப்பு கல்லூரியின் 54வது பணியாளர் பாடநெறியில் பயிலும் அதிகாரிகள் குழு ஒன்று ஆய்வுப் பயணத்திற்காக கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்தனர்

2025 பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை இலங்கைக்கு ஆய்வு விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற் கூட்டமைப்பு கல்லூரியின் 54 ஆவது பணியாளர் பாடநெறியை பயிலும் 18 மாணவர் அதிகாரிகள் மற்றும் மூன்று (02) கல்வி ஊழியர்களைக் கொண்ட கொமடோர் Ahsen Ali Khan தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று (2025 பெப்ரவரி 19) கடற்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்ததுடன், அங்கு கொமடோர் Ahsen Ali Khan மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியை சந்தித்தனர்.
19 Feb 2025
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணிபுரியும் திருமதி ஜூலி (Julie Chung) இன்று (2025 பெப்ரவரி 19) கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவைச் சந்தித்தார்.
19 Feb 2025
சர்வதேச இராணுவ விளையாட்டு சபையின் நினைவு தின வீதி ஓட்டம் - 2025 ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் நடைபெற்றது

சர்வதேச இராணுவ விளையாட்டு சபை தினக் (Council International Military Sports-CISM) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தலைமையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்துவின் பங்குபற்றுதலுடன் சர்வதேச இராணுவ விளையாட்டு சபை தின கொண்டாட்ட வீதி ஓட்டம் - (2025 பெப்ரவரி 18) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பாராளுமன்ற மைதானத்தில் இருந்து அக்குரேகொட முப்படைத் தலைமையகம் வரை நடைபெற்றது.
18 Feb 2025
இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை வலுப்படுத்துவதற்காக ஆழமற்ற நீரில் அளவிடும் கருவியொன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியது

இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை அபிவிருத்தி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால், நவீன ஆழமற்ற நீர் ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் Shallow Water Multi-Beam Echo Sounder இயந்திரத்தை இலங்கை கடற்படை நீர்வரைவியல் சேவைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வானது, இன்று (2025 பெப்ரவரி 18) கொழும்பு துறைமுகத்தில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவன வளாகத்தில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கௌரவ. Paul Stephens மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோரின் தலைமையில் நடைப்பெற்றது.
18 Feb 2025
கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் அனுராதபுரம் பரசங்கஸ்வெவ பகுதியில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், சிரச GAMMADDA சமூகப்பணி திட்டத்தின் அனுசரணையில், அநுராதபுரம் மாவட்டத்தின் மத்திய நுவரகம மாகாண பிராந்திய செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பரசங்கஸ்வெவ நிக்ரோதாராம விகாரையில் நிறுவப்பட்ட 1080வது நுண்ணுயிர் எதிர்ப்பு நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (2025 பெப்ரவரி 16) மக்களிடம் கையளிக்கப்பட்டது.
16 Feb 2025
"சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற திட்டத்தின் கீழ் கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை சுத்தம் செய்வதில் கடற்படையின் பங்களிப்பு

க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தீவைச் சூழவுள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை சுத்தம் செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "சுத்தமான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற திட்டத்துடன் இணைந்து 2025 பெப்ரவரி 15 ஆம் திகதி மற்றும் இன்று (2025 பெப்ரவரி 16) மேற்கு, தென் கிழக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட கடற்கரை சுற்றுலாத் தலங்களை சுத்தம் செய்தல் போன்ற திட்டங்களுக்கு கடற்படை முழுமையான பங்களிப்பை வழங்கியது.
16 Feb 2025
இந்தோனேசியக் கடற்படைக் கப்பல் 'KRI BUNG TOMO - 357' நட்புரீதியான விஜயத்திற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான 'KRI BUNG TOMO - 357' என்ற போர்க்கப்பல் இன்று (2025 பெப்ரவரி 16) கொழும்பு துறைமுகத்திற்கு சிநேகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றனர்.
16 Feb 2025
இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேரா பதவியேற்றார்

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் எச்.என்.எஸ். பெரேரா இன்று (2025 பெப்ரவரி 13) வெலிசர, தன்னார்வ கடற்படை தலைமையகத்தில், இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்றார்.
13 Feb 2025
256 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 367 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படையின் 256 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான நிரந்தர கடற்படையின் இருநூற்று பத்தொன்பது (219) பயிற்சி மாலுமிகள் மற்றும் தன்னார்வ கடற்படையின் நூற்று நாற்பத்து எட்டு (148) பயிற்சி மாலுமிகள் உட்பட மொத்தம் முந்நூற்று அறுபத்தேழு (367) பயிற்சி மாலுமிகள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2025 பெப்ரவரி 11 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
12 Feb 2025
கடற்படைத் தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கௌரவ நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரை சந்தித்தார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்கள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அவர்களை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக 2025 பெப்ரவரி 11 அன்று நீதியமைச்சில் சந்தித்தார்.
11 Feb 2025