நிகழ்வு-செய்தி
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் மூலம் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டது

அனுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஹீனுக்கிரிய மற்றும் நாவக்குளம ஸ்ரீ போத்திருக்கராம விகாரஸ்தான வளாகத்தில் கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடன் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 ஏப்ரல் 04 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.
07 Apr 2025
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் மூலம் பொலன்னறுவை மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

பொலன்னறுவை மாவட்டத்தின் மஹிந்தகம கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஸ்ரீ மகாசேன விஹாரய வளாகத்தில் கடற்படையின் தொழில்நுட்ப உதவியுடன் மற்றும் இலங்கை இராணுவத்தின் மருத்துவப் பிரிவின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட 1088வது நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 ஏப்ரல் 03 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
07 Apr 2025
இந்திய கடற்படைக் கப்பல் 'INS SAHYADRI' உத்தியோகபூர்வ விஜயத்திற்காக தீவை வந்தடைந்த்து

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS SAHYADRI' என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக 2025 ஏப்ரல் 04 தீவை வந்தடைந்தது, கொழும்பு துறைமுகத்தில் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலை வரவேற்றனர்.
05 Apr 2025
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல்களான BUNGO (MST-464) மற்றும் ETAJIMA (MSO-306) ஆகியவை தீவை விட்டு புறப்படுகின்றன

2025 ஏப்ரல் ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக தீவு வந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் BUNGO (MST-464) மற்றும் ETAJIMA (MSO-306) ஆகிய கப்பல்கள், விஜயபாஹூ கப்பலுடன் இணைந்து ஈடுபட்ட கூட்டுப் பயிற்சியின் பின்னர் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 2025 ஏப்ரல் 4 தீவை விட்டு வெளியேறியது. கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி கப்பலிற்கு பிரியாவிடை நடைபெற்றது.
05 Apr 2025
அமெரிக்க கடற்படையின் வானிலை, கடல்சார் கட்டளை மற்றும் சட்ட ஆய்வுகள் மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் குழு அட்மிரலை உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்

அமெரிக்க கடற்படையின் வானிலை மற்றும் கடல்சார் கட்டளையின் (U.S. Navy’s Meteorological and Oceanographic Command – NMOC) திருமதி கேப்ரியல் ஐவன் (Gebrielle Ivan) மற்றும் சர்வதேச சட்ட ஆய்வுகளுக்கான அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்தில் (U.S. Defense Institute of International Legal Studies – DIILS) திரு. டேவிட் லீ உட்பட அதிகாரிகள் குழு உத்தியோகபூர்வ சந்திப்புக்காக வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2025 ஏப்ரல் 02ஆம் திகதி அன்று கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.
05 Apr 2025
இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் நாகதீப புராண ரஜ மகா விகாரையில் சமய நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன

யாழ்ப்பாணம், நயினாதீவிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதீப புராண ரஜ மகா விகாரையின் முன்னாள் விகாராதிபதியான பிராமணவத்தே தம்மகித்தி திஸ்ஸ நாஹிமி அவர்களின் நினைவு தினத்தையும், நாகதீப புராண ரஜ மகா விகாரையின் விகாராதிபதியான உத்தர லங்காவே பிரதான சங்கநாயக நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாஹிமியின் அறுபத்து நான்காவது (64வது) பிறந்த நாளை முன்னிட்டும் சமய நிகழ்ச்சிகள் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரின் பங்களிப்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது.
05 Apr 2025
கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளையாக ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் கடமை களை பொறுப்பேற்றார்

கடற்படை ஏவுகணை கட்டளையின் கொடி அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் அவர்கள் இன்று (2025 ஏப்ரல் 04) திருகோணமலை கடற்படை நிறுவனத்தில் உள்ள கொடி அதிகாரி கடற்படை ஏவுதல் கட்டளை அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
04 Apr 2025
இலங்கை கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை ஆகியவை கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு பங்களிக்கின்றன

அதன்படி, 2025 ஏப்ரல் 03, அன்று, ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் கடற்படையினர், கொழும்பு காலி முகத்துவாரத்திற்கு முன்னால் உள்ள கடற்கரையை சுத்தம் செய்வதற்காக கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
04 Apr 2025
ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

ரியர் அட்மிரல் துஷார கருணாதுங்க இலங்கை கடற்படையில் 33 வருட கால சேவையை நிறைவு செய்து இன்று (2025 ஏப்ரல் 03) இன்று கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
04 Apr 2025
ஒரு சீரான மற்றும் ஆரோக்கியமான கடற்படைக்காக, கடற்படையானது மற்றொரு மலை ஏறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது

வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் சமநிலை மூலம் ஆரோக்கியமான கடற்படையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் புதிய பரிமாணங்களில் ஒன்றாக, கொள்கை மற்றும் திட்டமிடல் பணிப்பாளரின் முழு மேற்பார்வையின் கீழ், சிவனொலிபாத மலையை ஆராயும் நிகழ்ச்சி 2025 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் குறித்த பணிக்குழுவின் 34 கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டது.
03 Apr 2025