நிகழ்வு-செய்தி

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான 'ASAHI' கப்பலானது தீவில் இருந்து புறப்பட்டது

விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவுக்கு வந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் 'ASAHI' என்ற கப்பல், 2025 மார்ச் மாதம் 01 ஆம் திகதி விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்து இன்று (2025 மார்ச் 03) தீவை விட்டு வெளியேறியதுடன், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் மரபுப்படி கப்பலிற்கு பிரியாவிடை அளித்தனர்.

03 Mar 2025

இலங்கை விமானப்படையின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை கடற்படையின் வாழ்த்துக்கள்

இலங்கை விமானப்படையானது இன்று (2025 மார்ச் 02) 74வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகின்றது. அதற்காக கடற்படைத் தளபதி உள்ளிட்ட முழு கடற்படையினரும் வாழ்த்துக்களை இலங்கை விமானப்படைக்கு தெரிவிக்கின்றனர்.

02 Mar 2025

கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட LINE THROWING ADAPTER தொகுதிகள் நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினால் (Research and Development Unit - RDU) T 56 ஆயுதத்திற்காக தயாரிக்கப்பட்ட Line Throwing Adapter தொகுதிகள் இலங்கை கடற்படைக் கப்பல்களான கஜபாஹு மற்றும் சயுரல ஆகிய கப்பல்களுக்கு கையளித்தல் 2025 பெப்ரவரி 28 அன்று மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் உத்தியோகபூர்வமாக நடைப்பெற்றது.

02 Mar 2025

கடற்படையினால் வணக்கத்திற்குரிய பிக்குகளுக்காக விசேட நடமாடும் பல் மருத்துவ சிகிச்சையானது வெற்றிகரமாக நடாத்தப்பட்டது

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக, இலங்கை அமரபுர மகா சங்க சபையுடன் இணைந்து வணக்கத்துக்குரிய பிக்குகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நடமாடும் பல் வைத்திய சிகிச்சையானது 2025 பெப்ரவரி 28 அன்று பன்னிப்பிட்டிய ஸ்ரீ தேவ்ரம் மகா விகாரையில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

02 Mar 2025

கச்சத்தீவு வருடாந்த திருவிழாவைக் கொண்டாடுவதற்காக இலங்கை கடற்படையானது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றது

யாழ் குடாநாட்டின் கச்சத்தீவில் அமைந்துள்ள, வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெரும் வருடாந்த திருவிழாவானது 2025 மார்ச் மாதம் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் நடாத்துவதற்கு யாழ் மாவட்ட செயலகம் ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவும் பணியானது தற்போது இலங்கை கடற்படையினரின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது.

01 Mar 2025

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான 'ASAHI' என்ற கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (2025 மார்ச் 01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

01 Mar 2025

கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் வெஹெரயாய கனிஷ்ட பாடசாலையில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ மற்றும் கலாநிதி பெரகும் ஓவிடிகல அவர்களினதும் பங்களிப்புடன், மொனராகலை கல்வி வலயத்தின் வெஹெரயாய பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெஹெரயாய கனிஷ்ட பாடசாலையில் நிறுவப்பட்ட 1085 ஆவது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 பெப்ரவரி 28 ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

28 Feb 2025

கடற்படைத் தளபதி மற்றும் அட்மிரல் ஒப் த ப்லீட், வசந்த கரண்ணாகொட ஆகியோருக்கிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு

கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொட இன்று (2025 பெப்ரவரி 28,) உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கொழும்பு, எதுல்கோட்டையில் வைத்து அட்மிரல் ஒப் த ப்லீட், வசந்த கரண்ணாகொடவை சந்தித்தார்.

28 Feb 2025

கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் திஸ்ஸமஹாராம ஸ்ரீ தேவானந்த தேசிய பாடசாலையில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்பு மற்றும் பொருயியளாலர் திரு. புத்தி மங்கல அவர்களின் முதலீட்டினால் ஹம்பாந்தோட்டை கல்வி வலயத்தின் திஸ்ஸமஹாராம பிரிவில் உள்ள ஸ்ரீ தேவானந்தா தேசிய பாடசாலையில் நிறுவப்பட்ட 1084 ஆவது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 பெப்ரவரி 27 ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

28 Feb 2025

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரி வளாகத்தை சுத்தப்படுத்துவதற்கும் திருத்துவதற்கும் கடற்படை சமூக பராமரிப்பு பங்களிப்பை வழங்கியது

"க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்தல், உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் ஆகிய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியில் சுத்தம் செய்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் 2025 பெப்ரவரி 26 ஆம் திகதி அன்று மேற்கொள்ளப்பட்டது.

27 Feb 2025