நிகழ்வு-செய்தி

கடற்படை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர்

கடற்படை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து 2020 மே 04 அன்று ஹம்பாந்தோட்டை புதிய வைத்தியசாலை பகுதியில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

05 May 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த இரண்டாவது கடற்படை வீரர் முல்லேரியாவ வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்

2020 ஏப்ரல் 23 ஆம் திகதி குறித்த கடற்படை வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் முல்லேரியாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளின் பின் அவர் குணமடைந்து 2020 மே 04 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.

05 May 2020

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருளுடன் நபரொருவர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், அலியவலை பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களை கொண்ட ஒருவர் 2020 மே 03 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

04 May 2020

கொழும்பு கப்பல்துறை நிருவனம் (Colombo Dockyard PLC) மூலம் பல பாதுகாப்பு முகமூடிகள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான சுகாதாரப் பாதுகாப்பு முகமூடிகள் இன்று (2020 மே 22) கடற்படை தலைமையகத்தில் வைத்து கொழும்பு கப்பல்துறை நிருவனம் (Colombo Dockyard PLC) மூலம் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

04 May 2020

நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

பேருவல மீன்வள துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்த சுக்கையீனமுற்ற ஒரு மீவைரை கடற்படையினரினால் சிகிச்சைக்காக 2020 மே 04 ஆம் திகதி கரைக்கு கொண்டுவரப்பட்டன.

04 May 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் கடற்படை வீரர் பூரண குணத்துடன் ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்

2020 ஏப்ரல் 25 ஆம் திகதி குறித்த கடற்படை வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளின் பின் அவர் குணமடைந்து 2020 மே 03 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.

04 May 2020

கொடவெஹெர பகுதி மையமாக கொண்டு மேலும் ஒரு கிருமி நீக்கும் திட்டம் கடற்படை மேற்கொண்டுள்ளது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட மேலும் ஒரு கிருமி நீக்கும் திட்டம் 2020 மே 03 ஆம் திகதி குருநாகல் மாவட்டத்தில், கொடவெஹெர பிரதேச செயலகத்தில் உள்ள திகந்னேவ மற்றும் கும்புக்வெவ கிராமங்கள் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.

03 May 2020

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் கடற்படையினரால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் மற்றும் இரண்டு படகுகள் (02) 2020 மே 02 ஆம் திகதி முந்தம்பிட்டி, பெரியஆரு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படையால் கைது செய்யப்பட்டது.

03 May 2020

ஹெரொயின் கொண்ட சந்தேக நபரை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காலி ஊழல் தடுப்புப் பிரிவு இனைந்து 2020 மே 02 ஆம் திகதி ஹெரொயின் கொண்ட ஒருவரை காலி,தலாபிடிய பகுதியில் வைத்து கைது செய்தனர்.

03 May 2020

லீசன்ஸ் வைத்தியசாலை மற்றும் ‘மனுசத் தெரன’ திட்டத்தால் கடற்படைக்கு குடிநீர் போத்தல்கள் மற்றும் நீர் வடிகட்டி இயந்திரங்கள் ‘Water Dispenser’ நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான குடிநீர் போத்தல்கள் மற்றும் நீர் வடிகட்டி இயந்திரங்கள் ‘Water Dispenser’ இன்று (2020 மே 02) கடற்படை தலைமையகத்தில் வைத்து லீசன்ஸ் வைத்தியசாலை மற்றும் மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

02 May 2020