நிகழ்வு-செய்தி
கொழும்பு அரச வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கான மருத்துவ புத்துயிர் இயந்திரத்தை கடற்படை நிறுவியது

சுகாதார அமைச்சின் முன்முயற்சியின் கீழ், மற்றும் Sunken Overseas Pvt Ltd இன் நிதிப் பங்களிப்புடனும் இலங்கை கடற்படையின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தினால் தயாரிக்கப்பட்ட மருத்துவ ரீஹைட்ரேஷன் இயந்திரம் ஒன்று (01) 2025 ஜனவரி 29 கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் நிறுவப்பட்டது.
29 Jan 2025
இலங்கை கடற்படை ஒருங்கிணைந்த கடல் படைகளின் 154வது அதிரடிப்படையின் கட்டளையை பொறுப்பேற்றுள்ளது

இலங்கை கடற்படை ஒருங்கிணைந்த கடல் படைகளின் 154 வது பணிக்குழுவின் கட்டளையை ஏற்றுக்கொள்வது, 26 ஜனவரி 2025 அன்று பஹரேன் உள்ள மனாமாவில் உள்ள கூட்டு கடல்சார் படைகளின் தலைமையகத்தில் செய்யப்பட்டது.
29 Jan 2025
சுத்தமான இலங்கைத் திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தலைமன்னாரத்தில் சதுப்புநில மரங்களை நடும் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், கடற்படை ஒழுக்காற்று பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2025 ஜனவரி 28 ஆம் திகதி, தலைமன்னாரம் ஊறுமலை கடற்படைத் தளத்தின் முன் கடற்கரையில் சதுப்புநில மரம் நடும் திட்டத்தை கடற்படையினர் மேற்கொண்டனர்.
28 Jan 2025
போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் தடுப்புத் திட்டத்தின் தலைவி மற்றும் கடற்படை தளபதி இடையே உத்தியோகபூர்வ சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் தலைவி திருமதி Siri Bjune (Head of Global Maritime Crime programme of United Nations Office on Drugs & Crime) உட்பட ஒரு குழு உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இன்று (2025 ஜனவரி 27) கடற்படைத் தலைமையகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை சந்தித்தனர்.
27 Jan 2025
பாக்கிஸ்தான் கடற்படை அகாடமியில் மிகச் சிறந்த மத்திய அதிகாரிக்கான விருதைப் பெற்ற மத்திய அதிகாரி டிஎம்ஐவி தென்னகோன், பிரதி பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து விசேட பாராட்டுக்களைப் பெற்றார்.

பாகிஸ்தான் கடற்படை அகாடமியில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, மிகச்சிறந்த மத்திய அதிகாரிக்கான வாள் விருதை பெற்ற, மத்திய அதிகாரி டிஎம்ஐவி தென்னகோன், இன்று (2025 ஜனவரி 27,) கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட அவர்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார்.
27 Jan 2025
கடற்படையினர் திருகோணமலையில் சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர்

இலங்கை கடற்படையினர் திருகோணமலை நகர லயன்ஸ் கலகத்துடன் இணைந்து 2025 ஜனவரி 25 ஆம் திகதி திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் தொற்றா நோய்களைக் கண்டறிதல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.
27 Jan 2025
கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின், வருடாந்த இதழான ‘THE PORTHOLE’ வெளியீடு

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியினால் வெளியிடப்படும் வருடாந்த தொழில்முறை வெளியீடான 'The Porthole' இன் மூன்றாவது இதழ் கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் தளபதி ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் அவர்களால் வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவிடம் இன்று (2025 ஜனவரி 27,) கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
27 Jan 2025
கடற்படைத் தளபதி இராமஞ்ஞ மஹா நிக்காயவின் மஹாநாயக தேரரை சந்தித்து, கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசீர்வாதம் பெற்றார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காண்சன பானகொட, இன்று (2025 ஜனவரி 26) மீரிகம, மினிஒலுவ ஶ்ரீ வித்தியாவாச பிரவெண மஹா விஹாரஸ்தானத்தில், இலங்கை இராமஞ்ஞ மஹா நிகாயையின் மகாநாயக்கர், அக்கமஹா பண்டித அத்திபூஜ்ய மகுலேவெ ஶ்ரீ விமல நாயக்கரை வணங்கி, கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசீர்வாதம் பெற்றார்.
26 Jan 2025
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் மன்னார் வடக்கு கடற்பரப்பில் கைது

இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து 2025 ஜனவரி 25 இரவு மற்றும் இன்று காலை (2025 ஜனவரி 26) மன்னாருக்கு வடக்கே இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட (34) இந்திய மீனவர்கள், (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
26 Jan 2025
யாழ்ப்பாணத்தில் கடற்படை சிறப்பு நடமாடும் பல் மருத்துவ மனைகளை வெற்றிகரமாக நடபெற்றது

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக ஒழுங்கமைக்கப்பட்ட விசேட நடமாடும் பல் மருத்துவ மனைகள் 2025 ஜனவரி 21 முதல் 23 வரை யாழ்ப்பாணம் மாதகல் புனித அந்தோனியார் தேவாலயம், காங்கேசன்துறை நடேஸ்வ கல்லூரி மற்றும் வெத்திலகர்ணி பரமேஸ்வ கல்லூரியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
25 Jan 2025