நிகழ்வு-செய்தி
Good Neighbors Srilanka நிருவனம் மற்றும் Ceylon kisses நிருவனம் மூலம் கடற்படைக்கு பல நன்கொடைகள் வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான முகமூடிகள், கையுறைகள், கிருமி நீக்கும் திரவங்கள், பாதுகாப்பு உடைகள் மற்றும் 50,000 தேநீர் பைகள் 2020 மே 05 மற்றும் 06 திகதிகளில் Good Neighbors Srilanka மற்றும் Ceylon kisses நிருவனங்களினால் கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டன.
07 May 2020
Nilkamal Eswaran Plastics (Pvt) Ltd மூலம் கடற்படைக்கு தேவையான மருத்துவமனை படுக்கைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான மருத்துவமனை படுக்கைகள் 2020 மே 06 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் வைத்து Nilkamal Eswaran Plastics (Pvt) Ltd நிருவனம் மூலம் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
07 May 2020
தடைசெய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைது

2020 மே 06 ஆம் திகதி மட்டக்களப்பு களப்பு பகுதியில் நடத்திய ரோந்துப் பணியின் போது கொடுவமட பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 02 தடைசெய்யப்பட்ட வலைகள் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.
07 May 2020
வெலிசர கடற்படை தளத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இரண்டு கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்தனர்

2020 ஏப்ரல் 26 ஆம் திகதி அனுராதபுரம் மற்றும் அகலவத்த வைத்தியசாலைகளில் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக இனங்காணப்பட்டதுடன் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற மேலும் இரண்டு கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து 2020 மே 04 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்.
06 May 2020
உள்ளூர் கஞ்சாவுடன் ஒருவர் (01) கைது செய்ய கடற்படை உதவி

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு இணைந்து 2020 மே 05 ஆம் திகதி தனமல்வில நகர பகுதியில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டியொன்று மூலம் உள்ளூர் கஞ்சா கொண்டு சென்ற ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.
06 May 2020
சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடிக்க முயன்ற இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

மன்னார் முலங்காவில் பகுதியில் 2020 மே 05 ஆம் திகதி நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க முயன்ற இரண்டு (02) நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
06 May 2020
அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் கொண்டு சென்ற மூன்று லாரிகளுடன் மூன்று நபர்கள் கடற்படையால் கைது

கின்னியா கங்கை பாலம் அருகே கடற்படை நடத்திய சாலைத் தடையில் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் கொண்டு சென்ற மூன்று லாரிகளையும், மூன்று நபர்களையும் 2020 மே 5 ஆம் திகதி கடற்படை கைது செய்துள்ளது.
06 May 2020
HHCO Industries (Pvt) Limited நிறுவனம் மற்றும் ‘மனுசத் தெரன’ திட்டம் கடற்படைக்கு முகமூடிகள் கொண்ட பாதுகாப்பு தலைக்கவசங்கள் நன்கொடையாக வழங்கியது

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான முகமூடிகள் கொண்ட பாதுகாப்பு தலைக்கவசங்கள் இன்று (2020 மே 05) கடற்படை தலைமையகத்தில் வைத்து HHCO Industries (Pvt) Limited நிறுவனம் மற்றும் மனுசத் தெரன திட்டத்தால் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
05 May 2020
Southern Airduct (Pvt) Ltd நிறுவனம் மூலம் கடற்படைக்கு மின்விசிறிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

Southern Airduct (Pvt) Ltd நிறுவனம் 2020 மே 04 அன்று பல மின்விசிறிகள் நன்கொடையாக கடற்படைக்கு வழங்கியது.
05 May 2020
தனிமைப்படுத்தலை முடித்த 39 நபர்கள் பூஸ்ஸ மற்றும் ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ மற்றும் ஒலுவில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 39 நபர்கள் 2020 மே 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் மையங்களை விட்டு தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
05 May 2020