நிகழ்வு-செய்தி
கேரள கஞ்சா கொண்ட சந்தேக நபரை கைது செய்ய கடற்படை உதவி

இலங்கை கடற்படை மற்றும் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 ஜூலை 22 அன்று குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
23 Jul 2020
சந்தேகத்திற்கிடமான படகொன்றுடன் இரண்டு (02) நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜூலை 22 ஆம் திகதி இரவு நகர்கோயில் கடலில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, இலங்கை கடற்படை சந்தேகத்திற்கிடமான படகொன்றுடன் இரண்டு (02) நபர்கள் (02) கைது செய்தது.
23 Jul 2020
நீரில் மூழ்கிய நபரின் சடலத்தை கடற்படை மீட்டுள்ளது

விக்டோரியா நீர்த்தேக்கத்தில், அம்பகொடே பன்சல சாலை பகுதியில் நீரில் மூழ்கி காணாமல் போன ஒருவரைத் தேடி 2020 ஜூலை 22, அன்று கடற்படை மேற்கொண்டுள்ள சுழியோடி நடவடிக்கையின் போது காணாமல் போனவரின் சடலத்தை மீட்கப்பட்டடது.
23 Jul 2020
புதிய கடற்படை தளபதி ஸ்ரீ தலதா மாலிகைக்கு விஜயம்

புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் கடற்படை தளபதியாக பொறுப்பேற்ற பின் 2020 ஜூலை 22 ஆம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாலிகைக்கு சென்று ஆசீர்வாதங்களை பெற்று கொண்டார்.
23 Jul 2020
கடற்படையின் புதிய தளபதி மல்வத்து அத்தியாயத்தின் பிரதான சங்க தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படைத் தளபதியாக பதவியேற்ற பின்னர் 2020 ஜூலை 22 அன்று கண்டியில் உள்ள மால்வத்து மகா விஹாரயவுக்குச் சென்று பிரதான சங்க தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார். இந்த நிகழ்வில் கடற்படை தளபதியின் அன்பு மனைவியான கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சந்திமா உலுகேதேன்னவும் கலந்து கொண்டார்.
23 Jul 2020
கடற்படையின் புதிய தளபதி அஸ்கிரி அத்தியாயத்தின் பிரதான சங்க தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்ன, 24 வது கடற்படைத் தளபதியாக பதவியேற்ற பின்னர் 2020 ஜூலை 22 அன்று கண்டி அஸ்கிரி மகா விஹாரயவுக்குச் சென்று பிரதான சங்க தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றார். இந்த நிகழ்வில் கடற்படை தளபதியின் அன்பு மனைவியான கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சந்திமா உலுகேத்தேன்னவும் கலந்து கொண்டார்.
23 Jul 2020
கடற்படை தளபதி விமானப்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் 24வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் இன்று (2020 ஜூலை 21) விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்களை விமானப்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இங்கு வருகை தந்த கடற்படைத் தளபதியை விமானப்படை சம்பிரதாய முறைப்படி வரவேற்கப்பட்டதுடன் வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் கடற்படைத் தளபதியாக கடமையேற்ற பின் விமானப்படை தளபதியுடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பு இதுவாகும்.
22 Jul 2020
புதிய கடற்படைத் தளபதி செயல் பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரால் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் இன்று (2020 ஜூலை 21) செயல் பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
22 Jul 2020
தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 06 நபர்கள் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறினர்

கற்பிட்டி கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 06 நபர்கள் 2020 ஜூலை 20 ஆம் திகதி மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.
21 Jul 2020
வெடிபொருட்கள் கொண்ட 03 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டன

2020 ஜூன் 20 ஆம் திகதி கிலினோச்சி பாலவிய பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்களுடன் 03 பேரை கடற்படை கைது செய்தது.
21 Jul 2020