நிகழ்வு-செய்தி
‘மென் இன் வைட்ஸ்’ (Men in whites) அமைப்பிலிருந்து கடற்படை ஊனமுற்ற போர்வீரர்களுக்கு சிறப்பு ஆடைகள் வழங்கப்பட்டது

ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளின் அமைப்பான மென் இன் வைட்ஸ்(Men in whites), அமைப்பு மூலம் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்ட துணியிலிருந்து தயாரிக்கப்பட்ட டி-ஷர்ட்களை ஊனமுற்ற கடற்படை வீரர்களுக்கு வழங்குவதற்காக அமைப்பின் கொமான்டர் (ஓய்வு) ஹிரான் சொய்சா மற்றும் லெப்டினன்ட் (ஓய்வு) ஆயேஷ் இந்திரநாத் ஆகியோரால் 2021 டிசம்பர் 31 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் கடற்படை தலைமையகத்தில் அடையாளமாக ஒப்படைக்கப்பட்டது.
06 Jan 2021
கடற்படையால் நிர்மாணிக்கப்பட்ட மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது

நாட்டில் இருந்து கொடிய சிறுநீரக நோயை ஒழிக்கும் தேசிய பணியில் இலங்கை கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் மற்றொரு கட்டமாக அம்பலண்தோட்டை, சியம்பலாகொடே பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று 2021 ஜனவரி 03 ஆம் திகதி நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் பாதுகாப்பு, உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை மாநில அமைச்சர் திரு சமல் ராஜபக்ஷ அவர்களினால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
04 Jan 2021
காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றும் பணி மற்றும் ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு கடற்படை ஏற்றுக்கொண்டது.

காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றும் பணி மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் விசேட அணி வகுப்பு தொடர்பான கடமைகள் 2020 டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் இன்று (2021 ஜனவரி 01) இலங்கை இராணுவத்தில் இருந்து இலங்கை கடற்படை ஏற்றுக்கொண்டது. இந் நிகழ்வுகள் காலி முகத்திடலில் மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகை முன் இடம்பெற்றது.
01 Jan 2021
அரசாங்கத்தின் 'நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” அடைய கடற்படை உறுதியளிக்கிறது

2021 புதிய ஆண்டில் கடமைகள் தொடங்குவதற்கு முன்னர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமையில் இன்று (2021 ஜனவரி 21) காலை கடற்படை தலைமையகத்தில் அரசு ஊழியர் சத்தியப் பிரமாணம் நிகழ்வு இடம்பெற்றது.
01 Jan 2021
கடற்படைத் தளபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

2021 ஆம் ஆண்டுக்கு காலடி வைத்த கடற்படை மற்றும் சிவில் ஊழியர்களுக்கும், உங்கள் குடும்பங்களின் அனைவருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
01 Jan 2021
ரியர் அட்மிரால் டி விஜேதுங்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

ஏறக்குறைய 34 ஆண்டுகால தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் டி விஜேதுங்க இன்று (2020 டிசம்பர் 31) ஓய்வு பெற்றார்.
31 Dec 2020
கடற்படைத் தளபதி வட மத்திய கடற்படை கட்டளைக்கு விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன 2020 டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் வட மத்திய கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்து கட்டளையின் செயல்பாட்டுத் தயார்நிலை, அதன் நிர்வாக செயல்பாடு மற்றும் நலன்புரி வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
28 Dec 2020
கடற்படையால் ருவன்வெலிசேய வளாகத்தில் கட்டப்பட்ட 800வது நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக ருவன்வெலிசேய வளாகத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ளது.
26 Dec 2020
காலமான மிகவும் வணக்கத்திற்குரிய டென்மார்க்கில் ஞானதீப தேரரின் அஸ்தி வைக்கப்பட்ட தாது கோபுரம் புத்த பக்தர்களின் வழிபாட்டிற்காக பூஜை செய்யப்பட்டது

காலமான மிகவும் வணக்கத்திற்குரிய டென்மார்க்கில் ஞானதீப தேரரின் அஸ்தி வைத்து மீகலேவ எத்தலகல ஆரண்ய சேனாசனத்தில் கடற்படையினரால் கட்டப்பட்ட தாது கோபுரம் இன்று (2020 டிசம்பர் 26) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் புத்த பக்தர்களின் வழிபாட்டிற்காக பூஜை செய்யப்பட்டது.
26 Dec 2020
கடற்படை தளபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் நத்தார் பண்டிகை, அமைதியான மற்றும் மகிழ்ச்சியான பண்டிகையாக வேண்டும் என்று அனைத்து கிறிஸ்தவர்களுக்கும், கடற்படைப் பணியாளர்களுக்கும், சிவில் ஊழியர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
25 Dec 2020