நிகழ்வு-செய்தி

வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் ஸ்தாபிப்பு

இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய தினம் (ஒக்டோபர் 25) பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

25 Oct 2021

இந்திய கடற்படை கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து இருதரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சியினை தொடங்குகிறது

இந்திய கடற்படையைச் சேர்ந்த 01வது பயிற்சிப் படைக் கப்பல்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து இருதரப்பு கடற்படை கூட்டுப் பயிற்சியினை முன்னெடுப்பதற்காக நேற்றைய தினம் (ஒக்டோபர்,24) இலங்கை வந்தடைந்தன.

24 Oct 2021

இலங்கை கடற்படை கப்பல் 'சமுதுர' எச்எம்எஸ் 'கென்ட்' கப்பலுடன் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்பு

எரிபொருள் நிரப்பும் தேவைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த ரோயல் கடற்படை படைக்குச் சொந்தமான வகை 23 ரக ஹேர் மெஜஸ்டிஸ் 'கென்ட்' போர்க்கப்பல், இலங்கை கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட பயிற்சிகளின் பின்னர் நேற்றைய தினம் (ஒக்டோபர் 24) கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

24 Oct 2021

யாழில் உள்ள சதுப்புநில பகுதியில் கடற்படையினரால் 5,000 கண்டல் தாவரங்கள் நடுகை

யாழ் குடாநாட்டில் 5,000 கண்டல் தாவரங்களை நடுகை செய்ய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த திட்டம் அண்மையில் பொன்னாலை சதுப்புநிலப் பகுதியில் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

19 Oct 2021

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான ககா, முரசமே மற்றும் பியுசுகி ஆகிய 3 நாசகாரி கப்பல்கள் இன்றைய தினம் (ஒக்டோபர் 02) நாட்டிற்கு வருகை தந்துள்ளன. இதற்கமைய, ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான குறித்த கப்பல்கள் நல்லெண்ணெ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்த அடைந்துள்ளது.

02 Oct 2021

போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் பற்றிய பாடநெறிகளின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை நடத்தும் கடற்படையினர்களுக்கு திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் நடத்தப்பட்ட பாடநெறிகளின் (Counter Narcotics Boarding Officer Course/ Advanced Boarding Officer Course) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2021 செப்டம்பர் 22 அன்று கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ்வின் தலைமையில் திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

25 Sep 2021

மன்னார் பள்ளேமுனை கடற்படை முகாமில் நிர்மாணிக்கப்பட்ட புதிய படகுத்துறை திறக்கப்பட்டது

வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற, மன்னார் பள்ளேமுனை கடற்படை முகாமில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சிறிய படகுகள் நிருத்துவதுக்கான படகுத்துறை 2021 செப்டம்பர் 23 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்னவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

24 Sep 2021

இலங்கையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் அலெக்ஸி ஏ. பொன்டரேவ் (Aleksei A.Bondarev) இன்று (2021 செப்டம்பர் 23) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

23 Sep 2021

இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் எட்வர்ட் ஆபள்டன் அவர்கள் (Michael Edward Appleton) இன்று (2021 செப்டம்பர் 23) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னவை சந்தித்தார்.

23 Sep 2021

பூஸ்ஸ இடைநிலை சிகிச்சை மையத்திற்கு பல உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான ‘சுடு நீர் ஆவியாதல்’ உபகரணங்கள் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகேவிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 2021 செப்டம்பர் 17 ஆம் திகதி காலி பிஷப் ரேமன் விக்ரமசிங்கவின் தலைமையில் காலி கலுவெல்ல தேவாலயத்தில் இடம்பெற்றது.

21 Sep 2021