நிகழ்வு-செய்தி
போர்வீரர்கள் ஞாபகார்த்த தினம் மற்றும் பொப்பி மலர் விழா -2021 விஹார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படைவீர்கள் நினைவிடத்தில் இடம்பெற்றது

தாய்நாட்டிற்காக உயிர்நீத்த அனைத்து போர் வீரர்களும் நினைவுகூறும் போர்வீரர்கள் ஞாபகார்த்த தினம் மற்றும் பொப்பி மலர் விழாவின் -2021 பிரதான விழா கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படைவீர்கள் நினைவிடத்தில் இன்று ( 2021 நவம்பர்,14) நடைபெற்றதுடன் இந் விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இந் நிகவுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.
14 Nov 2021
கடற்படையின் 71 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரத்தில் கொடி ஆசீர்வாதம் பூஜை மற்றும் “கஞ்சுக” பூஜை நடைபெற்றது

2021 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் 71 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கஞ்சுக பூஜை மற்றும் கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த விழா 2021 நவம்பர் 11 மற்றும் இன்று (2021 நவம்பர் 12) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் ருவன்வேலி மஹா சேய மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.
12 Nov 2021
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் புதிய தேசிய பாதுகாப்பு அகாடமி திறந்து வைக்கப்பட்டுள்ளது

முப்படை, காவல்துறை மற்றும் அரசாங்க சேவையில் ஈடுபடுகின்ற மூத்த அதிகாரிகளுக்கு மூலோபாய சிந்தனையை ஊக்குவிக்கும் முதன்மையான நிறுவனமாக நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு கல்லூரி (National Defence College – NDC) இன்று (2021 நவம்பர் 11) அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் திறந்து வைக்கப்பட்டதுடன், இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.
11 Nov 2021
இந்தியாவில் நடைபெற்ற கோவா கடல்சார் மாநாட்டில் கழந்து கொண்ட கடற்படைத் தளபதி நாடு திரும்பினார்

மூன்றாவது முறையாக இந்திய கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கோவா கடல்சார் மாநாடு – 2021 (Goa Maritime Conclave – 2021) நவம்பர் 07 முதல் 09 ஆம் திகதி வரை இந்தியாவின் கோவா பிராந்தியத்தில் உள்ள இந்திய கடற்படை போர் பாடசாலையில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கலந்து கொண்டார்.
11 Nov 2021
ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்

ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக இன்று (2021 நவம்பர் 09) கட்டளை தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
09 Nov 2021
கடற்படையின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட தம்புள்ளை வீர மொஹான் ஜயமஹ கல்லூரியின் வசதிகள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கடற்படையின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட மத்திய மாகாணத்தின் தம்புள்ளை, கலேவெல வீர மோகன் ஜயமஹா மகா வித்தியாலயத்தின் வசதிகள் 2021 நவம்பர் 05 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்னவின் தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
06 Nov 2021
பூஸ்ஸ இடைநிலை சிகிச்சை நிலையத்திற்கு 9 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கப்பட்டது

இலங்கை கடற்படையால் பராமரிக்கப்படுகின்ற பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தின் பயன்பாட்டிற்காக தேவையான ரூ. 9 மில்லியன் மதிப்புள்ள அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் சிட்டிசன்ஸ் டெவலப்மெண்ட் பிசினஸ் ஃபைனான்ஸ் தனியார் நிருவனத்தால் (Citizens Development Business Finance PLC) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் அடையாளமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (2021 நவம்பர் 05) கடற்படைத் தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக்க திசாநாயக்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
05 Nov 2021
ரியர் அட்மிரல் அசோக விஜேசிறிவர்தன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

33 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் அசோக விஜேசிறிவர்தன இன்று (2021 நவம்பர் 19) ஓய்வு பெற்றார்.
05 Nov 2021
இரண்டு புதிய இலங்கை சாதனைகளைப் படைத்த கயந்திகா அபேரத்னவுக்கு கடற்படைத் தளபதியினால் பதவி உயர்வு

மகளிருக்கான 1500 மீற்றர் மற்றும் 5000 மீற்றர் தடகளப் போட்டிகளில் இரண்டு புதிய இலங்கை சாதனைகளைப் படைத்து இலங்கை கடற்படைக்கு பெரும் புகழைக் கொண்டு வந்த கடற்படை வீராங்கனி கயன்திகா அபேரத்னவுக்கு கடற்படைத் தளபதியினால் இன்று (நவம்பர் 21) பதவி உயர்வு வழங்கப்பட்டன.
02 Nov 2021
பானமவில் கடற்படையினரால் நீர் சறுக்கல் விளையாட்டு கிளப் திறந்து வைப்பு

இலங்கை கடற்படை அண்மையில் பானமவில் ஒரு புதிய நீர் சறுக்கல் விளையாட்ட கிளப்பை நிறுவியுள்ளது. பானம கடற்கரையில் நிறுவப்பட்ட இந்த புதிய வசதிகள், தென்கிழக்கு கடற்படைப் பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த கமகேவினால் இம்மாதம் 25ம் திகதி வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
27 Oct 2021