நிகழ்வு-செய்தி

கடற்படை நடவடிக்கைகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய கடற்படை அதிகாரிகளுக்கு பிரிட்டிஷ் கடற்படை நிறுவனத்திடமிருந்து சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன

பிரித்தானிய கடற்படை நிறுவனத்தின் (The Nautical Institute) இலங்கைக் கிளையினால் இலங்கை கடற்படையின் கடற்படைக் கல்விப் பாடநெறிகள் மற்றும் வணிகக் கடல்சார் கற்கைநெறிகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில், 2024 ஜூன் 29 ஆம் திகதி வெலிசர 'வேவ் என்' லேக்' நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது.

01 Jul 2024

இரண்டாம் உலகப் போரின் போது கிழக்குக் கடலில் மூழ்கிய ‘HMS Hermes’ என்ற விமானம் தாங்கி கப்பலில் கடற்படை ஒரு ஆய்வு சுழியோடி பயிற்சியொன்றை நடத்தியது

இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் விமான தாக்குதல் காரணத்தினால் மட்டக்களப்புக்கு அப்பால் கிழக்கு கடலில் மூழ்கிய அரச கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘HMS Hermes’கப்பலில் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடல் பகுதியில் சிறப்பு ஆய்வு சுழியோடி பயிற்சியொன்று கடற்படை சுழியோடி பிரிவால் 2024 ஜூன் 30 ஆம் திகதி வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன் இந் நிகழ்வில் கழந்துகொண்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா (ஓய்வு) ஆகியோர் ‘HMS Hermes’ கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் பணியாளர்களை நினைவு கூறும் வகையில் பொப்பி மலர்க்கொத்துகளை வைத்தனர்.

01 Jul 2024

கதிர்காமம் பாத யாத்திரையில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கு கடற்படையினரால் வசதிகள் வழங்கப்பட்டன

யாழ்ப்பாணத்தில் இருந்து செல்ல கதிர்காமத்திற்கு வருடாந்தம் மேற்கொள்ளப்படும் பாத யாத்திரையில் பங்குபற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் இலங்கை கடற்படையால் இன்று (ஜூன் 30, 2024) தொடங்கியது. குமண தேசிய பூங்காவின் நுழைவாயிலிலிருந்து கும்புக்கன் ஓய வரையிலான பாதையில் பயணிகளின் தேவைகளை வசதிகள் கடற்படையினர் குறிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த வசதிகள் ஜூலை 11 வரை தொடரும்.

30 Jun 2024

இலங்கை கடற்படை நீரியல் சேவை உலக நீரியல் தினத்தை கொண்டாடுகிறது

ஜூன் 21ஆம் திகதி ஈடுபட்டுள்ள உலக நீரியல் தினத்துடன் இணைந்து, இலங்கை கடற்படை நீரியல் சேவையால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக நீரியல் தின கொண்டாட்டம் நிகழ்வு இன்று (2024 ஜூன் 28,) கடற்படை நீரியல் பிரதானி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோரின் அழைப்பின் பேரில். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் தலைமையில் வெலிசர Wave n’ Lake நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது.

28 Jun 2024

இந்திய மீன்பிடிப் படகொன்றை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்தகடற்படை வீரர் பீ.டீ.பீ ரத்நாயக்கவின் இறுதிக் கிரியைகள் இலங்கை கடற்படையின் பூரண மரியாதையுடன் நடைபெற்றது

2024 ஜூன் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகொன்றை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்த கடற்டை வீரர் பீ.டீ.பீ ரத்நாயக்கவின் இறுதிச் சடங்கு 2024 ஜூன் 27 ஆம் திகதி இலங்கை கடற்படையின் பூரண மரியாதையுடன் இப்பாகமுவ ஹிபவ்வ பொது மயானத்தில் நடைபெற்றதுடன், குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

28 Jun 2024

தெல்கொட தெமாகலகம மஹமெவ்னாவ பௌத்த கல்லூரியின் உத்தியோகபூர்வ பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வு கடற்படை தளபதி தலைமையில் இடம்பெற்றது

தெல்கொட, தெமாலகம மஹமெவ்னாவ பௌத்த கல்லூரியின் மாணவர் தலைவர் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு 2024 ஜூன் 27 அன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் குறித்த கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

28 Jun 2024

கடற்படையின் செயல்பாட்டு திறன் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மொபைல் சேவை வாகனத்தை அறிமுகப்படுத்துதல்

கடற்படையின் செயற்திறன் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட முதலாவது நடமாடும் சேவை வாகனத்தின் அறிமுக விழா இன்று (2024 ஜூன் 27,) வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையில், இலங்கை கடற்படை கப்பலான தம்மென்னா நிறுவனத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

27 Jun 2024

கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்புடன் பலப்பிட்டி மடு கங்கையில் அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட விகாரை கடற்படை தளபதி தலைமையில் அலங்கரிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் தொழிநுட்பப் பங்களிப்புடன் பலபிட்டிய மடு கங்கையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விகாரை, 'ஸ்வெஜின்' விகாரை என பெயரிடப்பட்டது, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் 2024 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி மாண்புமிகு மகா சங்கத்தினரின் ஆசியுடன் பலபிட்டிய மடு கங்கையில் திறந்து வைக்கப்பட்டது.

27 Jun 2024

உலக இளைஞர் பௌத்த சங்கம் மற்றும் உலக பௌத்த முன்னணி ஆகியவற்றின் வருடாந்த மாநாடுகளை யாழ்ப்பாணம் நாகதீப புராண ராஜ மகா விகாரையில் நடாத்துவதற்கு கடற்படையின் உதவி

உலக இளம் பௌத்த சங்கத்தின் 20வது பொது மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 05வது வருட மாநாடு நாகதீப புராண ரஜ மகா விஹாரஸ்தானத்தில் வணக்கத்திற்குரிய நவதாகலை பதுமகித்தி திஸ்ஸ தேரர் தலைமையில், 2024 ஜூன் 22ம் திகதி அன்று நாகதீப புராண ராஜ மகா விகாரையில் நடைபெற்றுவதற்கு, இலங்கை கடற்படை ஆதரவளித்தது.

24 Jun 2024

இந்திய கடற்படைக் கப்பல் INS 'KAMORTA' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தீவை விட்டுச் சென்றது

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்திற்காக திருகோணமலை துறைமுகத்திலிருந்து தீவுக்கு வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான INS 'KAMORTA' கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன், இலங்கை கடற்படை கப்பல்கள் சமுதுராவுடன் கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் இன்று (ஜூன் 23, 2024) தீவை விட்டு புறப்பட்டது. குறித்த கப்பலுக்கு, திருகோணமலை துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

23 Jun 2024